தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 14 - நந்தினிஸ்ரீ
கங்கா தேவி மருத்துவமனையில்....
டாக்டர் இப்ப ஜெய்க்கு எப்படி இருக்கு???அவனுக்கு பெருசா எதும் அடிப்படல ல என மன்வீர் பதட்டத்துடன் கேட்க இல்ல மன்வீர் ஆனா என டாக்டர் இழுக்க என்ன டாக்டர்? எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க பிளீஸ் என கவின் கேட்க அது வந்து மிஸ்டர் கவின் மாடில இருந்து விழுந்த வேகத்துல அவரோட வலது காது ஆழமா அடிப்பட்டுருக்கு அதனால அவரோட வலது காதோட செல்கள் சேத மடஞ்சி செவிபுல நரம்பு நேரடியாக துண்டிக்கப்பற்றுச்சு இதனால அவருக்கு இனி ஒரு காது தான் கேக்கும் அது போக இடது காலுல இருக்க கீழ் எலும்பு ஓடஞ்சிருச்சு அதனால அந்த கால்ல ராட் வெச்சி செட் பண்ணி ஆப்பேரஷன் பண்ணிருக்கோம் சோ இனிமே அவரால முன்ன மாரி இயல்பா நடக்க முடியாது ஓட முடியாது என்னால முடிஞ்ச வரைக்கும் அவருக்கு ட்ரீட் மெண்ட் கொடுத்துருக்கேன் இனிமே மத்ததெல்லாம் உங்க கைல தான் இருக்கு ஜெய்க்கு நல்ல மன தைரியத்தையும் நம்பிக்கையும் கொடுத்து அவர மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வரணும் என சொல்லி விட்டு டாக்டர் கிளம்பினார்.
ச.... எல்லாம் நம்மனால தான் நாம அவன தனியா அனுப்பிருக்க கூடாது எவிட்டேன்ஸ் எடுத்துட்டு வா இத எடுத்துட்டு வான்னு நம்ம அவன அனுப்புன னால தான் அவன் இன்னிக்கு இந்த நிலமைல இருக்கான் மன்வீர் சை....என கவின் வெறுப்புடன் தலையில் அடித்து கொள்ள நீ சொன்னது சரி தான் கவின் நம்ம பிளான்க்கு எல்லாரையும் இன்வால்வ் பண்ண னால தான் இப்ப நம்ம னால எல்லாரும் எல்லாத்தையும் இழந்து கஷ்ட படுறாங்க இனி நாம இப்படி இருந்தோம்னு இருக்கு ரவங்களையும் இழக்க நேரிடும் இனி மிச்ச இருக்க நம்ம பிளான்ன முடிக்குறதுக்கு நாம இனி யாரையும் எதிர் பாக்காம சேக்காமா நம்மலே முடிச்சிடலாம் என மன்வீர் சொல்ல அது எப்படி முடியும் மன்வீர் நமக்கு இனிமே தான் நிறைய பேரோட உதவி தேவ படுது மன்வீர் இப்ப போய் நீ எப்படி சொல்ற என கவின் சொல்லும் மோது ஹலோ சார் பேஷண்ட் கண் முழிச்சுட் டாரு உள்ள வந்து பாக்குறீங்களா என நர்ஸ் சொல்ல இருவரும் வேகமாக உள்ளே சென்றனர்.
ஜெய் மெல்ல கண் விழித்து பார்த்த போது மன்வீரும் ஜெய்யும் அவனை உற்று பார்த்து நின்று கொண்டிருப்பதை கண்டான். ம... ம.... மன்வீர் என அவன் பேச முடியாமல் வாயை திறக்கும் போது அவன் கையை பிடித்து அழுத்தினான் மன்வீர் ஜெய் உனக்கு இப்ப ஒன்னுமில நீ நல்லா இருக்க நான் ரோசிய வர சொல்லிருக்கேன் அவ வந்து உன்ன இனிமே கவனமா பாத்துப்பா இனி உனக்கு இந்த அடி தடி சண்ட பழி வங்குறது கொல்றது எல்லாம் வேணாம் நீ ரோசியோட நிம்மதியா அமைதியா சந்தோசமா இனி வாழு எங்களுக்கு அதுவே போதுமென