மருத்துவமனைக்குச் சென்றார்கள்.
கிருத்திகாவிற்கு தையல் மட்டுமே போட வேண்டி இருந்ததால், செல்வத்தை மட்டும் ஜீப்பில் உட்கார வைத்து கை விலங்கு மாட்டிவிட்டு, மருத்துவமனையிலேயே எல்லோரும் காத்து இருந்தார்கள்.
ப்ரித்வி கிருத்திகா இருவரும் வெளியில் வந்தனர். ப்ரித்வியின் கழுத்தில் சிறு அளவில் தான் காயம் என்றாலும் அசையக் கூடிய பகுதி என்பதால் தையல் போட்டு, பிளாஸ்டர் ஒட்டி இருந்தார்கள்.
அவள் கிடைத்ததும் முதலில் அவள் பெரியப்பாவிற்கு தகவல் தெரிவித்தான் ப்ரித்வி. ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடியால், அவர்கள் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அன்றையப் பொழுதை முடித்து விட்டுத் தங்கள் அறைக்குத் திரும்பினர்.
ராகவியிடம் கிருத்திகா, அவள் பெரியப்பாவிற்காக ஷாப்பிங் செய்ய வேண்டும் என்றும், அவளுக்குத் துணையாக ப்ரிதிவி வந்து இருப்பதாகவும் கிருத்தி போனில் இருந்து மெசேஜ் அனுப்பி இருந்தான் ப்ரித்வி. எனவே அவர்கள் யாரும் இன்னும் கிருத்தியைத் தேட ஆரம்பிக்கவில்லை.
செல்வத்தை விசாரிக்க எண்ணியும், கடத்தல் சம்பந்தப்பட்ட புகார் கொடுக்கவும் கிருத்தியையும் ப்ரித்வி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றுக் கொண்டு இருந்தான்.
ஹிமிகிரி பகுதியில் வைத்து செல்வத்தைப் பிடித்து இருந்ததால், அந்தப் பகுதிக் காவல் நிலையத்திற்குச் செல்லும் வழியில், சிக்னலுக்காகக் காத்து இருந்தார்கள்.
அப்போது சட்டென்றுச் செல்வம் காவலர்களைத் தாக்க , ஜீப் நிலைத் தடுமாறியது. அதைப் பயன்படுத்திக் கொண்ட செல்வம், ரோடில் இறங்கி ஓட ஆர்மபித்தான்.
கிருத்தி, ப்ரித்வியின் கார் இவர்களைப் பின் தொடர்ந்து வந்து இருக்க, செல்வம் தப்பித்து ஓடுவதைப் பார்த்து ப்ரித்வி அவனைத் துரத்தினான். சற்று தூரத்தில் ஒரு சிறு குன்று இருக்க, அதன் மேல் ஏறினான் செல்வம். ப்ரித்வி அவனைத் துரத்த, ஏதோ தோன்றியக் கிருத்தியும் அவர்கள் பின்னால் சென்றாள்.
குன்றின் முடிவில் கோவில் இருக்க, செல்வம் சுற்றிப் பார்த்து விட்டு அங்கே ஒளிந்து கொண்டான். ப்ரித்வி, கிருத்தி இருவரும் அவனைத் தேடி வர, அவர்களை நோட்டமிட்டுக் கொண்டே பின்னால் நகர்ந்தான் செல்வம்.
அதற்குள் கிருத்திகா உள்ளுணர்வு செலுத்த கோவிலின் உள்ளே சென்றாள். கோவிலினுள் பக்தர்கள் இருந்தனர். சிறு கோவில் என்றாலும் , மிதமான அளவில் கூட்டம் இருந்ததால், ப்ரித்வி மற்றவர்களைக் கவராமல் செல்வத்தை நெருங்கிக் கொண்டு இருந்தான். மற்றவர்களை