தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 16 - ராசு
இப்போதெல்லாம் திலகவதிக்கு கண்ணம்மாவை கவனமாக பார்த்துக் கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது.
மனதளவில் குழந்தையாக இருந்தவளுக்குக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் உபத்திரங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளைக் கவனிப்பதுடன் அவளை இளவரசனிடம் இருந்து காப்பதுதான் பெரிய வேலையாக இருந்தது.
ஒருவேளை கண்ணம்மா அவன் விருப்பத்திற்கு இணங்கி நல்லவிதமாக நடந்திருந்தால் அவனுக்கு அவள் மீதான ஆர்வம் குறைந்திருக்கலாம். அவள் மறுக்க மறுக்கத்தான் அவள் மீதான மோகவெறி அவனுக்கு அதிகரித்தது.
வயதுக்கேற்ற பக்குவம் இல்லாததால் அவளுக்கு மசக்கையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்போது க ... நினைத்து சொத்து கைக்கு வரும் காலம் சீக்கிரம் வந்துவிட்டதே என்ற மகிழ்ச்சிதான் அவன் மனதில் இருந்ததே தவிர தன்னுடைய குழந்தையைப் பார்க்கப் போகிறோம் என்றெல்லாம் அவன் நினைக்கவேயில்லை
This story is now available on Chillzee KiMo.
...