ஏற்கனவே மனதிற்குள் பயந்திருந்தவள், மேலும் அன்னையின் வார்த்தைகளால் இன்னும் பயந்து போனாள். குறிஞ்சியம்மாளுக்கு தெரிந்திருந்தால், மகளை எச்சரித்திருப்பார். ஆனால் தனியாக இருக்கும்போது இப்படி அடிக்கடி அவர் சொல்லிக் கொண்டிருக்க, நித்யா இதையே மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள்.
அடுத்த முறை அவள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, அவளுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாக மருத்துவர் கூறினர். இப்படியே அது தொடர்ந்தால், அது குழந்தைக்கும் அன்னைக்கும் சேர்த்து தான் பாதிக்கும், அதனால் இரத்த அழுத்தத்தை கட்டாயம் குறைக்க வேண்டுமென்று எச்சரித்து அனுப்பினர். அதற்கு அவள் உணவு முறையில் என்னென்ன கடைப்பிடிக்க வேண்டுமென்பதை சொல்லி அனுப்பினர். முக்கியமாக எந்தவொரு கவலையையும் மனதில் வைத்திராமல் இருக்க வேண்டுமென்பதையும் கூறி அனுப்பினர்.
அவர்கள் சொன்ன உணவு முறைகளை வஞ்சி பார்த்து பார்த்து செய்தாலும், மீண்டும் மீண்டும் அதன் விபரீதத்தை அறியாமலேயே அவளது படிப்பை விடுவதை பற்றியே அவர் பேசிக் கொண்டிருக்க, அப்போது தன்னால் பட்டம் பெற முடியாதா? எத்தனை ஆசையாக பட்டம் வாங்க வேண்டுமென்று நினைத்தாள்? அது நிறைவேறாதா? என்று சிந்தித்தவளுக்கு இன்னுமே இரத்த அழுத்தம் கூடி வலிப்பு போல் வந்துவிட்டது.
வீட்டில் அனைவருமே பதறி அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கார்த்திக் அந்தநேரம் அலுவலகத்தில் இருக்க அவனுக்கு தகவல் சொல்லப்பட, பதட்டத்தோடு அவன் மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
நித்யாவை பரிசோதித்த மருத்துவர் வெளியில் வந்து கோபமாக, "அவங்களுக்கு ப்ளட் பிரஷர் அதிகமாயிருக்கு, அது நல்லதுக்கில்லை. அது குறையணும், உப்பு, எண்ணெய் அதிகமா சேர்த்துக்காம சாப்பிடணும் அப்படின்னு சொல்லி அனுப்பினேனா இல்லையா? அதை அவங்க பாலோவ் செய்றாங்களா இல்லையா? முன்னை செக் அப்க்கு வந்ததை விட, அவங்களுக்கு இப்போ ப்ளட் ஃப்ரஷர் அதிகமாயிருக்கு, இப்படியே போனா அது அம்மா, குழந்தை ரெண்டுப்பேருக்குமே நல்லதில்ல,
குழந்தை இன்னும் முழுசா வளர்ச்சியாகலை, அப்படி இருந்தா கூட உடனே சிசேரியன் செய்து குழந்தையை எடுத்துடலாம், ஆனா அதை இப்போ செய்ய முடியாது. அதனால அவங்களை ஜாக்கிரதையா பார்த்துக்கணும், அவங்க ப்ளட் ஃப்ரஷர் நார்மலா ஆகற வரை அவங்க ஹாஸ்பிட்டலில் இருக்கட்டும், அதுக்குப்பிறகு வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம், ஆனா அங்கேயும் அவங்களை நீங்க கேர்ஃபுல்லா பார்த்துக்கணும், நான் சொல்றதை மனசுல