கண்டு எழுந்தார் மைதிலி.
"அந்த பொண்ணு ரொம்ப பயங்கரமா கத்தறா...தலைல அடிச்சுகிட்டு அழறா" நர்ஸ் சொல்ல, அவரின் பின் விரைந்தனர் டாக்டரும் சகுந்தலாதேவியும்.
அந்த அறையின் உள்ளே ஒரு நர்ஸும் ஒரு கம்பவுண்டரும் பவித்ராவை பிடிக்க முயல, அவளோ அவர்கள் கையை எல்லாம் தட்டிவிட்டு அவள் கைகளில் ஏற்றப்பட்டிருந்த குளுக்கோசை எல்லாம் கழற்றி தூக்கி இருந்தவள் "ஹிஸ்டெரியா" வந்ததை போல அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து அவர்களை அடிக்க முயல, உள்ளே நுழைந்த சகுந்தலாதேவியின் தலையை பதம் பார்த்தது அவள் தூக்கி அடித்தது. அவரின் முன்னேற்றியில் இருந்து ரத்தம் வழிய அதை கண்டு பயந்து போன பவித்ரா மீண்டும் மயங்கி சரிந்தாள்.
பின் அவளை அங்கிருந்த படுக்கையில் கிடத்தியவர்கள் அவளுக்கு ஒரு இன்ஜெக்ஷன்நை இட்டு அவளை உறங்க வைக்க, மறுபுறம் அங்கிருந்த நர்ஸ் சகுந்தலாதேவிக்கு முதலுதவி செய்து அந்த காயத்திற்கு ஒரு பண்டஜை இட்டார்.
அவள் உறங்குவதை உறுதி செய்த மைதிலி நர்ஸிடம் கேட்டார். "என் சடென்னா இப்படி பிஹேவ் பண்ணுனாங்க?"
"மேம் அந்த பொண்ணு கண்ணு விழிச்சதும் கொஞ்சம் பயந்திருந்துச்சு. என்னை பார்த்து ஏதோ கேக்க வந்துச்சு. அதுக்குள்ள கம்பவுண்டர் அண்ணா மெடிசின் கொண்டு உள்ளே வந்தாங்க. அவரை பார்த்ததும் கத்தி கலாட்டா பண்ண ஆரம்பிச்சுடுச்சு" நர்ஸ் சொல்ல, ஓரளவு நிலையை யூகித்த மைதிலி யோசனையுடன் நின்றார்.
சகுந்தலாதேவி பவித்ராவின் அருகே சென்று பார்த்தார். அவளின் கள்ளமில்லா முகத்தை கண்டவருக்கு அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை எண்ணி ஆத்திரம் வந்தது. அவரின் ஆஸ்ரமத்தில் இது போன்ற பெண்கள் இருக்கின்றனர் தான். காதலனை நம்பி வந்து ஏமாற்றப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் எல்லாம். ஆனால் இதுபோல இவ்வளவு சின்ன வயதில் இப்படி ஒரு நிலையில் அந்த குழந்தையை பார்க்க அவருக்கு வலித்தது. அவரையும் அறியாமல் அவளின் மேல் ஒரு வித பாசம் பரிவு உண்டானது. அவரருகே நின்று கொண்டிருந்த மைதிலியை பார்த்தார். அவர் ஏதோ யோசனையில் இருப்பது புரிந்தது அவருக்கு.
"டாக்டர் நீங்க தப்பா நெனைக்கலைனா நான் ஓண்ணு சொல்லட்டுமா?" சகுந்தலா கேட்க"என்ன" என்பதை போல பார்த்தார் மைதிலி.
"அந்த பொண்ணை நான் என்கூட கூட்டிட்டு போகட்டுமா? இது என்னோட விசிட்டிங் கார்டு.