நீங்க என்னை பத்தி விசாரிச்சிட்டு அனுப்புனா போதும். எனக்கு என்னவோ இப்போ அந்த பெண் இருக்கற சூழ்நிலைல அவளை போலீஸ் கிட்ட ஒப்படைக்கிறது சரியா படலை" சகுந்தலாதேவி சொல்ல, அவரின் கைகளில் இருந்த அந்த விசிட்டிங் கார்டை வாங்கி கொண்ட மைதிலி அந்த கார்டை பார்த்தார்.
"ஏன் ஆஸ்ரமத்துல இந்த மாதிரி நிறைய பெண்கள் இருக்காங்க. " சொன்னவரை ஏறிட்டு பார்த்தவர் "எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் சொல்றேன்" என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார் மைதிலி.
"மேம் உங்களை டாக்டர் கூப்டறாங்க" நர்ஸ் வந்து சொல்ல, சகுந்தலாதேவி எழுந்து டாக்டர் அறைக்கு சென்றார்.
"உக்காருங்க மேம் "என்றவர் சிறிது நேர யோசனைக்கு பின் தொடர்ந்தார். “ஆண்களை கண்டா பயப்படறா இதை நாங்க அன்ரோபோபியானு சொல்லுவோம். அவளுக்கு ஏற்பட்ட ஏதாவது கசப்பான நிகழ்வுகளால் அவளுக்கு இது மாதிரி ஆயிருக்கும். அது மட்டும் இல்லாமல் அவளின் உடல் நிலை மோசமா இருக்கு. அவளுக்கு இப்போ உடல், மனம் ரெண்டுக்கும் டிரீட்மெண்ட் தேவை. இந்த சூழ்நிலைல அவளை பற்றி போலீஸ்ல சொல்லி அவங்க மூலமா ஏதாவது ஒரு ஹோம்ல தங்க வெக்கறது எனக்கு சரியாப்படல. ஆனா அதே சமயம் அவளுடைய ப்ரெக்நன்சி அந்த பெண்ணுடைய விருப்பத்துக்கு மாறாக நடந்த விஷயமா இருக்கும் பட்சத்துல, அதுக்கான வாய்ப்புகள் தான் அதிகம்னு தோணுது, இதை போலீஸ்ல சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கு. ஆனா அதுக்கு அந்த பெண் உண்மையை சொல்லணும். அது வரைக்கும் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பான ஒரு இடம் தேவை படுது.உங்களை பத்தி நான் விசாரிச்சேன். நீங்க உங்க ஆஸ்ரமம் மூலமா நெறய பெண்களுக்கு நல்லது பண்ணிருக்கீங்க. சோ அவளுக்கு விருப்பம் இருந்தா நீங்க கூட்டிட்டு போங்க. சாரி தப்பா நெனைக்காதிங்க. நீங்க கேட்டதும் என்னால சம்மதம் சொல்ல முடியல." மைதிலி சொல்ல, "தேங்க்ஸ் டாக்டர். நான் கேட்டதும் நமக்கென்ன அபப்டினு நெனைச்சு என் கூட அனுப்பாம என்னை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுட்டு நீங்க அனுப்பறது எனக்கு சந்தோசமா தான் இருக்கு. இந்த மாதிரி சமூக அக்கறை உள்ள மனுஷங்களை பார்க்கும்போது சந்தோசமா இருக்கு. மனசுக்கு ஒருவித நிம்மதி கூட வருது" என்றார் சகுந்தலாதேவி.
"ஓகே மேம். நம்ம அந்த பொண்ணுகிட்ட பேசி பாக்கலாம். அவளை பத்தின ஏதாவது ஒரு டீடெயில்ஸ், அடலீஸ்ட் பேராவது சொல்றாளானு பாக்கலாம்" என்றபடி இருவரும் எழுந்து அவள் இருந்த அறைக்கு சென்றனர்.
அவர்கள் உள்ளே நுழையும் போது பவித்ராவுக்கு நினைவு திரும்பி இருந்தது. நர்ஸ் அவளிடம்