(Reading time: 12 - 23 minutes)
Kaarigai
Kaarigai

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எடுத்து கொண்ட சிகிச்சையின் பலனாக மெல்ல மெல்ல தன்னுடைய இறுக்கத்தில் இருந்து வெளியே வர துடங்கியிருந்தாள்.

ஆனால் அவளின் இறந்தகாலம் பற்றி கேட்டால் மட்டும் அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போனது. அதையும் அவளே சொல்லும் சூழ்நிலை வந்தது.

மெல்ல மெல்ல தன்னுடைய இறந்த காலத்தை பற்றி பேச துடங்கினாள். அதிர்ந்து போனார் சகுந்தலா அவளின் நிலையை கேட்டு. அந்த நிமிடமே மாரியப்பனையும் அதற்க்கு உடந்தையாக இருந்த கண்ணம்மாவையும் சிறையில் தள்ளி காலம் எல்லாம் உள்ளே இருக்க செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் பவித்ரா எதற்குமே சம்மதிக்கவில்லை. அவர்களை பற்றி பேசும்போதெல்லாம் அதில் இருந்து அவள் வெளியே வர பலநாட்கள் தேவைப்பட்டது. சகுந்தலா எத்தனையோ முயன்றும் அவரால் அவளின் மனதை மாற்ற முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அவளை வற்புறுத்துவது ஆபத்தாக முடியக்கூடும் என்று மருத்துவர் சொல்லவும் அதற்க்கு மேல் அதை பற்றி பேசுவதை விட அவளை இதில் இருந்து வெளியே கொண்டுவருவதே முக்கியமாக பட்டது அவருக்கு.

அதன் பின் தனியார் மூலமாக பனிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுத வைத்து அதன் பின் ஒரு பெண்கள் கல்லூரியில் அவளை சேர்த்தார். யாரோடும் பேசவே பயந்தவன் மெல்ல மெல்ல வெளியுலகை புரிந்து கொள்ள துவங்கினாள். ஆனாலும் பஸ்ஸிலோ பொது வெளியிலோ யாரேனும் ஆண்கள் அவளை நெருங்கி வந்தால் அவளால் அந்த பயத்தை கட்டுப்படுத்த இயலாமல் போனது. இரண்டு வருடங்கள் தொடர்ந்து மேற்கொண்ட மன நல மருத்துவத்தால் குறைந்தபட்சம் அவளின் பயத்தை வெளியே காண்பிக்காமல் வாழ பழகி கொண்டாள்.

"எதுக்காக சகுந்தலாம்மா என்னை காப்பாத்தணும்? என் வாழ்க்கைல இனியும் நான் அனுபவிக்க ஏதாவது கஷ்டங்கள் பாக்கி இருக்கானு எல்லாம் யோசிச்சுருக்கேன். ஆனால் அதுக்கெல்லாம் பதில் சொல்ற மாதிரி அம்மாவின் மறைவுக்கு அப்பறம் இந்த ஆஸ்ரமத்தை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்துச்சு. அந்த பொறுப்பு கூட இப்போ உமாவும். நான் வளர வாழ்க்கைக்கான அர்த்தம் இது தான்" எத்தனை பெரிய விஷயத்தை சொல்லிவிட்டு எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் நிற்கின்றாள் என்று வியந்து போனார் லட்சுமி. அவளருகே வந்தவர் ஆதரவாக அவளின் கரங்களை பற்றி கொண்டார். அவளின் நிலையில் இப்போது அறிவுரை சொல்வதெல்லாம் சரியாக வராது என்பதை உணர்ந்திருந்தவருக்கு தெரியும் அவளை எப்படி சரி செய்ய வேண்டும் என.

உணர்வுகள் எல்லாம் அற்று போக பவித்ராவின் அறைவாசலில் இருந்து எந்த சத்தமும் செய்யாமல் தனது அறைக்கு சென்று கொண்டிருந்த சத்யாவின் உள்ளம் பவித்ராவுக்காக துடித்து கொண்டிருந்தது அவளின் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் ஆன விடையை தேடி.

Episode # 09

Episode # 11

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.