அவன் சொன்னதை அப்படியே சுந்தரமும் நம்பினான். க்ருபா எல்லா பெண்களையும் கவரும் அழகன் என்றும் நம்பினான். அங்குதான் க்ருபாவின் கேரக்டர் பற்றிய சின்ன விஷ வித்து அவன் மனதில் விழுந்தது.
ஆனாலும் இயல்பாக க்ருபாவிடம் பேசினான். "சரி.. க்ருபா என்ன விஷயமா வந்தன்னு சொல்லவில்லை."
"அவ்வளோதானா உன் தங்கச்சி பாசம். நீ பேசியதை கேட்டால் முன்னி ரொம்ப வருத்தப்படுவாள்"
"முன்னிக்கு என்ன… அடடா.. நாளை அவளோட பிறந்த நாள்… மறந்து போயிட்டேனே.."
"இப்ப ஞாபகம் வந்துடுச்சா? நாளைக்கு வீட்டில் பார்ட்டி மறக்காமல் வந்துடு"
"கண்டிப்பாக… வந்துடுவேன்" சுந்தரம் உறுதியளித்தான்.
அந்த பிறந்த நாள் விருந்தில்தான் சுந்தரத்தையும் துளசியையும் சந்திக்க வைக்க திட்டமிட்டான். இதை கற்பகத்திடம் சொன்னபோது அவள் முகம் மாறினாள்.
ஏனெனில் துளசியின் பயம் அவளுக்குள்ளும் வந்திருந்து. துளசி சொன்ன போது ஈஸியாக எடுத்துக் கொண்ட கற்பகத்தால் துளசியின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. அதையே க்ருபாவிடமும் சொன்னாள்.
"வேண்டாம் அண்ணா. நீங்கள் நினைப்பது நடக்காது. சுந்தரம் அண்ணா நல்லவர்தான்… ஆனால் வேறு ஜாதி.. துளசி வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள்."
"சுந்தரம் ரொம்ப நல்லவன் முன்னி. துளசி ஹாப்பியா இருக்கலாம்"
"ஆனால்.."
"ரெண்டு பேரும் சந்திக்கட்டும். அவர்கள் விருப்பத்தை தெரிந்து முடிவெடுக்கலாம். ஓகே"
"அப்படி ஒன்றும் வேண்டாம் அண்ணா. அவங்க வாழ்க்கையை நாம டிஸைன் செய்ய வேண்டாம்."
"இரண்டு பேரும் நல்ல கணவன் மனைவியா இருப்பாங்க. எனக்கு துளசி யும் ஒரு தங்கைதான்.
"நான் அப்படி நினைக்கலை"
"நினைச்சுக்கணும். துளசி நல்லா இருக்கணும்னுதானே நீ என்னை சாய்ஸ் பண்ணினே. அதைத்தான் நானும் செய்யறேன். நம்மகூட வேற ஜாதிதான் நான் சரின்னு சொல்லி இருந்தால் நீ என்ன செய்திருப்பாய்?."
"அது…"