Page 7 of 7
அந்த நொடியின் நெடி மாற
பூமிக்குள் புதைந்திருக்கலாம்...
கடலலையில் மறைந்திருக்கலாம்
மேகத்தில் தொலைந்திருக்கலாம்
ஏதாவது செய்து மீண்டிருக்கலாம்…
ஆனால்..
அழிவின் ஆயுதமாக மாறியிருந்தது.
பிறகு..
அழிந்துபோனதற்காக அழுதும்
தன்னை தண்டித்து கொண்டும்..
தவம் செய்து தப்பிக்கும் நோக்கிலும்..
நெருப்பில் சுயம் எரித்து மீளும்
உபாயங்களை செய்ய ஆரம்பித்தது..
இங்கு அது என்பது 'அது' அல்ல.. இருள் சூழந்த மனம்.
தொடரும்