"இந்த உண்மை எனக்குத் தெரியாதுன்னு நினைத்துக்கிட்டு இத்தனை வருடமா அவ ஏமாற்றிட்டு இருக்கா! அதர்வுடைய அப்பா யாருன்னு இன்னிக்கு வரைக்கும் எங்களுக்குத் தெரியாது! திடீர்னு ஒரு நாள் வந்தா, உங்க வாரிசு என் வயிற்றுல வளர்கிறதுன்னு சொன்னா, மறுபேச்சு பேசாம ஏற்றுக்கிட்டேன். வேற என்ன பண்ண முடியும்? நீ என்னைத் தப்பானவன்னு நினைத்தாக் கூட எனக்குக் கவலை இல்லை. உன்னால எனக்கும், தர்மாவுக்கு இடையேயான பந்தத்தை இனி களங்கப்படுத்த முடியாது! நான் கிளம்புறேன். உனக்கு நீ என்னுடைய மகன்னு சொல்ல விருப்பம் இல்லைன்னா கூட பரவாயில்லை. என் தர்மாவுக்கான மரியாதை அவளுக்குக் கிடைக்கணும். அதுக்கு நீ என் வாரிசுன்னு இந்த உலகத்துக்குத் தெரிந்தாகணும்! இதுக்கு, உன் சம்மதம் எனக்குத் தேவையில்லை!" என்றவர் தன் இளவலை நோக்க அவரோ ஏதும் பேசாமல் முன்னேறினார்.
"நான் கிளம்புறேன்மா! உன் கவலை எனக்குப் புரியுது! நான் அந்த வீட்டுக்கு போகலை! அங்கே இருக்கிறது எனக்குப் பாதுகாப்பில்லை." என்ற புன்னகை அசோக்கினை குற்றவுணர்வில் தள்ளியது.
"நான் கூடல்வாய்புரத்துக்கு போறேன். என் தர்மா பிறந்த ஊருக்கு! எங்களை ஒன்று சேர்த்த இடம் அது! அங்கே போறேன். என் கடைசி காலத்தை அங்கே கழிக்கணும்னு ஆசைப்படுறேன்." அவ்வாக்கியத்தில் நொறுங்கிப் போனான் அசோக்.
"வரேன்மா!" வேறு ஏதும் கூறாமல் நகர்ந்தார் சூர்ய நாராயணன். அவன் தடுப்பான் என்று செய்வதறியாது அசோக்கினை அவள் நோக்க, அவனோ திக்கற்று சிலையாகி நின்றான். அவன் மனதில் அவர் குறித்து எழுந்த சந்தேகங்களை எல்லாம் உடைத்துத் துகளாக்கி, அவனை நோக்கி எள்ளி நகையாடியது,அவர் சமர்ப்பித்த காகிதங்கள்!!!
தொடரும்!
Go to Uyiril kalantha urave story main page
{kunena_discuss:1149}