சமையலறையில் காபி போட்டு கொண்டு யொசித்தான். லைஜிரிக் டை எதிலமைட் மூளையை பாதிக்கும் இராசயனம். சில வகை காட்டு காளான்களில் இருக்கிறது.அதை சாப்பிட்டால் செரட்டோனின் சுரப்பை பாதித்து நாஸ்டால்ஜியா எனப்படும் பழைய நினைவுகளை கிளப்பி விடும்.
மனதில் ஏக்கமாக படிந்திருக்கும் கனவுகளை நினைவுபோல கற்பனையாக காட்சிபடுத்தும். எதிரில் யார் இருந்தாலும் அவரைக் கொண்டு மாய காட்சியை அமைக்கும்.
கரெக்ட்… அதிதியின் மனதில் அப்பாவை இழந்த ஏக்கம் இருக்கிறது. அதனால் அதிரதனை அப்பாவாக பார்க்கிறது…
அதேபோல துளசி அத்தைக்கு மாயக்காட்சி தோன்றி இருந்தால்… தன் கணவனுடன் பழகுவதாக நினைத்து அப்படி நடந்திருக்கலாமோ….
இதை மட்டும் நிருபித்து விட்டால் போதும் அதிதியின் மனம் தெளிவாகி விடும். அப்புறம் 'அது' யார் என்று விசாரணை செய்யலாம்...அவன் திட்டமிட்டான்.
அவன் நினைத்ததில் ஒரு பாதியை முடித்து வைக்க அவனைடைய அப்பா கங்காதரன் கிளம்பி வந்து கொண்டிருந்தார்.
தொடரும்