(Reading time: 8 - 15 minutes)
Kaarigai
Kaarigai

முடிவுக்கு வந்தவராக, "வா பவித்ரா" என அவள் கையை பிடித்து அவளை அழைத்து கொண்டு அவரின் அறைக்கு சென்று கதவை அடைத்தார்.

பவித்ராவுக்கு அவர் ஏன் கதவை அடைத்தார் என புரியவில்லை.

அவளை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவர், எங்கேயோ தேடி ஒரு சிறிய சாவியை எடுத்து வந்தார். அங்கிருந்த அந்த அலமாரியின் மேலே இருந்த ஒரு பழைய சூட்கேஸை எடுத்து கீழே வைத்தார். அது தூசி படிந்து கிடந்தது. அதை ஒரு துணியால் துடைத்தவர் தன கையில் இருந்த சிறிய சாவியை கொண்டு அதை திறந்தார்.

பவித்ராவுக்கு அவர் என்ன செய்கிறார் என புரியவில்லை. ஏதேதோ பேப்பர்கள் இருந்தது, அதை எல்லாம் ஒதுக்கியவர் கையில் ஒரு கவரை எடுத்தார். அதை திறந்து அதில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து பவித்ராவின் கையில் கொடுத்தார்.

அது ஒரு பழைய செய்தித்தாள். கிட்டத்தட்ட முப்பது வருடம் பழையது என்பதால் அழுக்கு படிந்து கிழிந்து போயிருந்தது ஆங்காங்கே.

அதை கையில் வாங்கிய பவித்ரா புரியாமல் பார்த்தாள் லக்ஷ்மியை.

"பாரு" என்பதை போல கண்ஜாடை செய்தவர் அவளின் அருகே அமைதியாக வந்து அமர்ந்தார்.

அதில் இருந்த ஒரு செய்தியில் அருகே ஒரு சின்ன புகைப்படம் இருந்தது. அதை நன்றாக ஊன்றி பார்த்தபோது புரிந்தது பவித்ராவுக்கு அது சத்யாவின் அப்பா "சுந்தரம்" என...அவரின் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டிருந்தது அந்த செய்தி.

பம்பாயில் ஒரு தமிழரின் சாதனை!!! முப்பதுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மீட்பு!!!

Episode # 16

Episode # 18

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.