தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 20 - நந்தினிஸ்ரீ
மா...மா.....என தேம்பி அழுது கொண்டே ரதியின் அருகில் சென்று சாரா அவளை கட்டி பிடித்து ஏன் மா இப்படி பண்ண நானே இவன கொண்ணுறுப்பேனே நீ எதுக்கு மா இவன கொன்ன என சாரா கேட்க
இல்ல சாரா இத வேற யாராவது பண்ணிருந்தா நான் வருத்தப்பட்டுருப்பேன் நானே இத செஞ்சதுனாலதான் ரொம்ப சந்தோச படுறேன் இவன் மத்தவங்களுக்கு செஞ்சது அநியாயம் ஆனா எனக்கு செஞ்சது துரோகம் பழமொழியே இருக்கு எதிரிய கூட மன்னிச்சிடலாம் துரோகிய மன்னிக்க கூடாதுனு இவன் எனக்கு மட்டும் துரோகம் செய்யல உனக்கு என்ன சுத்தி இருந்தவங்களுக்கு உன்ன காப்பத்த வந்தவங்களுக்கு அவனே சுத்தி இருக்க அவனோட நெருக்கமான நண்பர்களுக்கு பிசினஸ் பார்ட்னர்ஸ்களுக்கு விஸ்வாசமா இருந்த வேல காரங்களுக்கு அப்பறம் சம்பாதமில்லாம பாதிக்கப்பட்ட கவின் தங்கச்சி மன்வீர் நண்பன் சலீம் மாறியான அப்பாவி மக்களுக்குக்காகவும் இதலாம் விட என்ன வெறி கொண்டு கொல்ல வெச்சுது உங்க அப்பாவ அவன் கொன்னது அதான் காதல நான் கேட்டது என் மேல உயிரா உண்மையா இருந்த என் கமல என்கிட்ட இருந்து பிரிச்சி அவன கொன்ன பாவிய நான் எப்படி சும்மா விட முடியும் இது பத்தாதுன்னு என் பொண்ணு சாரவ அடைய அவள இவளோ நாள் டார்ச்சர் பண்ணி கடைசியா கொல்ல போனத பாத்ததும் அந்த காட்டு மிருகத்த என் கையாலேயே கொல்லனும் நினைச்சேன் ஷூட் பண்ணி அவன முடிச்சேன் இந்த ரதி ரொம்ப ஸ்மார்ட் என்னோட டார்கெட் என்னைக்கும் மிஸ் ஆகாதுன்னு இந்த தேவேஸ்வர் என்கிட்ட அடிக்கடி சொன்னத அவனுக்கே டார்கெட் வெச்சிட்டேன் ரதி என திமிருடன் கலந்த கம்பிரத்துடன் ரதி சொல்வதை கேட்ட சாரா
ம்மா....நீ எனக்காக இப்ப உன் வாழ்க்கையயே தியாகம் பண்ணிட்டு ஜெயிலுக்கு போக முடிவு பண்ணிட்டியே உன்ன மாரி எல்லா அம்மாவும் இருப்பாங்களானு எனக்கு தெரியாது ஆனா இப்ப சொல்றேன் நீதான் இந்த உலகத்திலேயே பெஸ்ட் மாம் தி பெஸ்ட் மாம் ஐ லவ் யூ மாம் எவளோ ஜென்மம் எடுத்தாலும் நீ தான் எனக்கு அம்மாவா வரணும் என சொல்லி கொண்டே சாரா ரதியை கட்டி பிடித்து அழுதான் .
ரதியின் கையிலிருந்த துப்பாக்கியை வாங்கினான் மன்வீர் அதை உற்று பார்த்த போது மூர்த்தியின் துப்பாக்கி .சிறிது நேரத்துக்கு முன் நடந்த சண்டையில் மூர்த்தி தன் காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டி சாரவின் கையிலிருந்த தட்டி விட பட்ட துப்பாக்கி படிக்கட்டில் கீழ் உருண்டு விழுந்து கிடந்தது அதை கோவத்துடன் நடந்து உள்ளே வந்த ரதியின் கண்ணில் சிக்க அதை கையில் எடுத்தால் ரதி. மன்வீர் இப்ப என்ன பண்றது??நாம இங்கிருந்து சீக்கிரம் வெளிய போனும் பார்ம் ஹௌசுல தீ பரவிட்டு இருக்கு என வேத்