எப்படியோ ரதி மேடம் வெளிய வந்துட்டாங்க அதுவே போதும் என்ன சொல்ற மன்வீர் என கவின் சொல்ல ஆமா ...கவின் இதுமட்டுமில்ல நம்ம நினைச்ச மாரி எல்லாரையும் குற்றவாலின்னு ப்ரூவ் பண்ணியாச்சு இந்த வெளி உலகத்துக்கு இனி இந்த மாரி தப்பு செய்ய நினைக்குற செஞ்சிக்கிட்டு இருக்க செய்ய போற எல்லா கிரிமினல்ஸ்கும் இது ஒரு படாமா இருக்கும்னு நம்புறேன் என மன்வீர் சொல்ல இனி நடந்து முடிஞ்சித பத்தி பேசுறது விட நடக்க போறது பத்தி தான் நான் பேச விரும்புறன் மன்வீர் தேவேஸ்வரால பாதிக்க பட்ட மக்கள் அப்பறம் அவங்களோட குடும்பத்துக்கு என்னால முடிஞ்ச வர பணம் கொடுத்து அவங்க பசங்களுக்கு நல்ல கல்வி கொடுத்து வேல கொடுத்து அவங்கள வாழ வைக்க போறேன் தெரிஞ்சோ தெரியாமையோ இதுக்கு நானும் ஒரு காரணம் மாயிட்டேன் அவன் கூட இருந்து அவனுக்கு சப்போர்ட் பண்ணதால இனி என்னோட திவான் குரூப்ப நல்ல முறையில செயல்பட்டு முன்னேற்றத்துக்கு கொண்டு வரணும் இது தான் இப்போதைக்கு என்னோட கொள்கையே என ரதி சொல்ல சூப்பர் மேடம்.......இதுக்கு கண்டிப்பா என்னோட மாக்சிமம் பங்கு உங்க கம்பெனிக்கு இருக்கும் நீங்க தயங்காம என்கிட்ட ஹெல்ப் கேக்கலாமென இனியவின் கையை பிடித்து கொண்டு வந்து உள்ளே என்ட்ரி கொடுத்து வேத் சொல்ல ஏ.... வேத் நல்ல டைம்மிக்கு வந்த ஏன் இவளோ லேட் என கவின் கேட்க
அது ஒண்ணமில கவின் இனியாவுக்கு திடிருன்னு உடம்பு சரியில்ல அதான் ஹாஸ்பிடல் போயிட்டு வறதுக்குள்ள லேட் ஆயிடுச்சு என வேத் சொல்ல ஓ நோ இனியா உங்களுக்கு என்னாச்சு எனி பீவர் ?கோல்டா? காப்பா?ஆர் யு ஆல்ரைட் நௌ என இனியாவை தொட்டு பார்த்து சாரா கேட்க
ஐ அம் பைன் சாரா அதெல்லாம் ஒன்னுமில நான் நல்லா தான் இருக்கன் வேத் தான் ஒரு சின்ன இருமல் தும்பல் வந்தா கூட ஒடனே ஹாஸ்பிடல் போலாம் வா வான்னு சொல்லி இழுதுட்டு போய்டுராரு ஒரே அன்பு தொல்ல தான் இப்பல்லாம் என இனியா சொல்ல ஓ.... வேத் பரவாலயே கம்ப்லீட் அஸ்பண்ட் மெட்டேரியலா மாரிட்ட போ என சாரா சொல்லி சிரிக்க சரி சரி...என்ன கலாய்குறது இருக்கட்டும் நீங்க ரெண்டு பேரும் எப்ப மேரேஜ் பண்ணிக்க போறீங்க என வேத் கேட்க
சாரா மன்வீரை பார்க்க மன்வீர் சாரவை பார்க்க..... சாரா புருவத்தை தூக்கி என்ன சொல்ற மன்வீர் என கண் அசைவில் கேட்க
உதட்டை பிதிக்கி கொண்டு நோ என மன்வீர் சொல்ல இருவரும் ஒன்றாக சேர்ந்து நோ.... நாங்க இப்ப கல்யாணம் பண்ணிக்க போறதில்ல என ஒரே நேரத்தில் சொல்ல ஏன்????? என மற்ற அனைவரும் கோரசாக கேட்க