வைரஸால் ஏற்பட்ட மாற்றங்களை சரியான மருத்துவ சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும். அதற்கு இதுவரை என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் எனக்கு தெரிய வேண்டும்." என்றான்.
"அபிக்கு ஆரம்பம் முதல் இன்றுவரை என்ன மருந்துகள் தந்திருக்கிறேன் என்பதை பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். இவை அனைத்தும் சர்மா எனக்கு எழுதிக் கொடுத்ததுதான். " என்று சொன்னபடி மருந்துகளின் பட்டியலலை தந்தார்.
அதை படித்து பார்த்த அதிரதன்..
"இந்த மருந்துகள் குணப்படுத்துவதற்கு இல்லை. அவளுடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தரப்பட்டிருக்கிறது. அந்த வைரஸ் ஆக்டிவாக செயல் படாமல் இருப்பதற்காக வியாதியை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்காக தந்தது. உதாரணமாக அந்த வைரஸ் தோலில் உள்ள மெலனின் என்ற நிறமியை எடுத்துவிடும் .மேலும் எலும்புகளின் கடின தன்மையை குறைத்து அதனை வலுவிழக்க செய்து விடும். இதனால் எலும்புகள் வளையும் தன்மையுடன் இருக்கும். இது மேலும் மோசமடைந்து பொடிப் பொடியாக உதிரும் வாய்ப்பு இருக்கிறது என்று அதை தடுப்பதற்காக மறந்து தந்திருப்பார்." என்றான்.
"கரெக்ட்.. "
அவர் பேசிக் கொண்டே கையிலிருந்த பைலை அவனிடம் நீட்டினார் அவன் அதை பிரித்து படிக்க ஆரம்பித்தான்.
"ஓகே அங்கு நான் இதை வீட்டிற்கு சென்று மீண்டும் படித்துப் பார்க்கிறேன். இப்பொழுது அபியை பார்க்க முடியுமா?" என்று கேட்டான்.
"அவள் யாரையும் சந்திக்க விருப்பப்பட மாட்டாள் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நாம் சென்று பார்க்கலாம்." என்று எழுந்தார். அவருடனேயே மற்றவர்களும் எழுந்தனர். அபியின் அறை வாசலுக்கு சென்று கதவை தட்டினார்.
சில நொடிகள் மட்டுமே திறந்த அந்த கதவு படக்கென்று மூடிவிட்டது. அதன் அர்த்தம் அவள் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. அதிதி அதை உணர்ந்து கொண்டு கதவைத் தட்டினாள்.
"அக்கா நான் அதிதி வந்திருக்கிறேன். கதவை திறங்கள். "