(Reading time: 11 - 21 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இணைக்க வேண்டும்" என்றான்அதை வினய் செய்ய ஆரம்பித்தான்.

அபியை கிட்டத்தில் வைத்து பார்த்த போது மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்தபோதும் மனம் பதைத்து போனது. அவன் மனதில் ஒரு எண்ணம் மட்டுமே இருந்தது.  'இறைவா இந்த பெண்ணை சீக்கிரமே குணப்படுத்த அருள வேண்டும்' என்று நினைத்தான்.

அபியின் அருகில் சென்று கையை தொட்ட  அடுத்த நொடி தூக்கி எறியப்பட்டான்.

"அடடாஅபி அவன் என்னுடைய உதவியாளர்தான். உன்னுடைய மருத்துவத்தை நல்லபடியாக செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய வேலையை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறாள் எனக்கும் அதிதி க்கும் இடையில் இருந்த சிக்கல்களை தீர்ப்பதற்கு இவன் மிகவும் உதவி செய்திருக்கிறான்நம் குடும்ப நண்பர் போலதான்…  எனவே நீ தயங்க வேண்டாம். உன்னுடைய அருகில் நானும் அதிதியும் இல்லாத சமயத்தில் இவர்தான் மருத்துவக் குறிப்புகளை எடுத்து பதிவு செய்ய வேண்டும். அப்சர்வேஷன் செய்ய வேண்டும். எனவே கண்டிப்பாக ஒரு ஆள் இங்கே இருக்க வேண்டும் நீ இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று நினைக்கிறேன்" சமாதானப்படுத்தும் குரலில் கூறினான்.

அவன் சொன்னதை புரிந்து கொண்டது போல அபி மீண்டும் அங்கிருந்த சக்கர நாற்காலியில் அமைதாயாக அமர்ந்தாள். அவளுடைய கை  மணிக்கட்டிலும் கால்களிலும்  கருவிகளை இணைத்து முதல்மெடிக்கல் அப்சர்வேஷன் செய்ய ஆரம்பித்தனர். ஒரு குறிப்பேட்டில் அவளுடைய இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், நாடி துடிப்பு ஆகியவற்றை குறிக்க ஆரம்பித்தனர்.

அப்போது அங்கே உள்ளே வந்து வைத்தியர் தாத்தா எல்லாம் தயாராக இருக்கிறதா என்று கேட்டார். தயாராகிவிட்டது என்று சொல்லவும் அதிதியை அழைத்து,

"நீ அபிக்கு நான் சொன்ன மாதிரி மருந்துகளை கட்டி  துணிகளை வைத்து இறுக்கமாக சுற்றிவிடு. நான் இந்த குளியல் தொட்டியை தயார் செய்கிறேன்" என்றார்.

"சொல்ல மறந்துட்டேன். அபியின் தலைமுடியை எடுத்து விடு. முடிந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.