(Reading time: 11 - 21 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அளவு வெட்டினால் போதும். காயம் பட்டு விடக்கூடாது."

"சரி ஐயாநான் கவனமாக பார்த்து கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு அதிதி அபியை அழைத்து சென்றாள்.

சற்று நேரத்தில் அனைத்தும் தயாராகிவிட்டனர் அபியை அந்த குளியல் தொட்டியில் படுக்க வைத்து மீண்டும் மருத்துவ உபகரணங்களை இணைக்கும் பணியை செய்ய ஆரம்பித்தனர் அவளுடைய கால் எலும்பு வளைந்து இருப்பதை நேராக்கும் பொருட்டு குச்சி வைத்து இறுக்கமாக  பேண்டேஜ் துணிகொண்டு கட்ட ஆரம்பித்தனர். அப்பொழுது வலி தாங்க முடியாமல் அபி கையை உதற..  அவளுடைய கையை பிடித்துக் கொண்டிருந்த வினய் ஒரு நொடியில் தூக்கி எறியப்பட்டான்.

வினய் பறந்து போய் விழுந்ததை கவனிக்கவும் தான் அதிரதனுக்கு சட்டென அந்த விஷயம் நினைவிற்கு வந்தது. அபிக்கு கால் எலும்புகளில் பலம் கிடையாது. ஆனால் கையில் பலம் ஜாஸ்தி அந்த இடத்தை வினயை பிடிக்க சொன்னது தவறு. ஏனெனில் வினைக்கு அந்த விஷயம் தெரியாது. ஓடிப்போய் வினயை தூக்கி விட்டான்.

"உனக்கு ஒன்றும் பலத்த அடி இல்லையே"

" இல்லை.. பாஸ்! இருந்தாலும் வலிக்கிறது" என்று சொல்லியபடி அவன் நிற்க முயற்சித்தான்.

" நீ அபியுடைய கையைப் பிடிக்கும் முன்பே நான் சொல்லி இருக்க வேண்டும். அவளுக்கு கைகளில்தான் பலம் அதிகம்நான் அதை கண்ணால் பார்த்திருக்கிறேன். நீ இனிமேல் சற்று கவனமாக இரு" என்றான்.

" ரொம்ப நன்றி பாஸ் இந்த விஷயத்தை இவ்வளவு சீக்கிரமாக செல்ல விட்டீர்கள். இல்லை என்றால் இன்னும் இரண்டு மூன்று முறை அபியின் கையாலேயே அடிபட்டு நான் நான் எலும்புகள் உடைந்து அப்புறம் எனக்கு மருத்துவ கட்டுப்போடும் மாதிரி ஆகியிருக்கும்."

 "அப்படியெல்லாம் இல்லை. எனக்கும் இந்த மாதிரி அனுபவம் புதிது அல்லவா"

"ரொம்ப நன்றி சார். வாருங்கள் நம் வேலையை பார்ப்போம்என்று  அபியின் அருகில் சென்ற பொழுது அதிரதன் அவளிடம்,

" அபி கொஞ்சம் பொறுமையாக இருஉனக்கு வலிக்கும் அது தெரியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.