;
முடிந்தது.... என்ன அந்த நேர்மையானவங்களை கண்டுபிடிக்கத்தான் நிறைய நேரம் எடுத்தது....
மிக முக்கியமா ஒரு சிறிய அளவில் கூட என்னுடன் பணியாற்றிய டீம் மெம்பெர்ஸ் விஷயம் கசிய விடலை... இவங்க கைது நடக்கிற வரை யார் கைது செய்யப்படப் போகிறார்கள் என்றுகூட யாருக்கும் தெரியாது... ஆளும் கட்சிக்கு எதிர் கட்சி ஆட்களையும், எதிர் கட்சிக்கு ஆளும் கட்சி ஆட்களையும் வேவு பார்ப்பதாக கூறித்தான் இந்த ஆபரேஷன் நடைபெற்றது....
இந்த நேரத்தில் எந்த நேரத்திலும் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது வழக்கிற்காக உதவிய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்...”
“இந்த மிஷன்ல நிறைய பேர் இருந்தாங்கன்னு சொல்லுறீங்க... நீங்களும் சந்திரன் சார் மட்டும்தான் இங்க வந்திருக்கீங்க... இந்த வழக்குல உங்களுக்கு உதவி பண்ணின மத்தவங்கலாம் யார் சார்..”
“அவங்களை பத்தி இங்க வெளிப்படையா சொல்ல முடியாது... எல்லாருமே பல விதமான வழக்குகள்ல ஈடுபடறவங்க... தங்களை வெளிப்படுத்திக்க விரும்பலை... அதுவும் இல்லாம போலீஸ் இல்லாம நிறைய துறை சேர்ந்தவங்க ஒத்துழைப்பும் இருந்தது... ஸோ எல்லாரையும் வெளிப்படுத்துவது சாத்தியமில்லை... அவங்க ஒத்துழைப்பு எங்களுக்கு இன்னும் இந்த வழக்கு முடியும் வரை வேணும்... அவங்க பாதுகாப்பு அதுவரை மிக மிக முக்கியம்...”
“அந்த மாணவர்களை காப்பாற்றும் போது மத்திய மந்திரி மருமகளும் அவங்களோட கடத்தப்பட்டிருந்தாங்கன்னு கேள்விப்பட்டோமே... அது உண்மையா... அவங்களையும் வெளிநாட்டுக்கு கடத்திட்டு போறதா இருந்தாங்களா... இல்லை மந்திரியோட முன் பகை ஏதாவது இருந்ததா....”
“இல்லை உங்களுக்கு நரேந்திரன் மகன் சுந்தரைப் பத்தி தெரிஞ்சிருக்கும்... பெண்கள் விஷயத்தில் மிக மோசமானவன்... காயத்ரியின் மேல் அவன் பார்வை இருந்தது... மந்திரியின் மகன் தடாலடியாக காயத்ரியை திருமணம் செய்ததால் அவர் மேல் ஏகப்பட்ட காழ்ப்புணர்ச்சியில் சுந்தர் இருந்தான்... மந்திரியின் மகனை பழிவாங்கவே சுந்தர் காயத்ரியை கடத்தியது...
ஆனால் அவன் செய்த தவறு நரேந்திரன் மாணவர்களை அடைத்து வைத்த இடத்திற்கே காயத்ரியை கடத்திச் சென்றது... எங்களுக்கு சாதகமாக அமைந்த விஷயமும் அதுதான்... காயத்ரியின் கைகடிகாரத்தில் இருந்த GPS மூலமாகத்தான் எங்களால் மிக விரைவாக அனைவரையும் மீட்க முடிந்தது....”
“மாணவர்களை எதற்காக கடத்தினார்கள்.... அவர்களையும் கொன்று உறுப்புகளைத்