;
வழக்கு அல்ல... பல உயிர்களை காவு வாங்கிய வழக்கு... அது மட்டும் அல்லாமல் நரேந்திரனுக்கு கிடைக்கும் தண்டனை கண்டிப்பாக மற்ற கல்வி நிறுவனத் தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
கல்வி என்பது வியாபாரப் பொருள் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.... பாலர் பள்ளியில் ஆரம்பித்து பட்ட மேற்படிப்பு வரை கல்வி என்பது வியாபாரமாகத்தான் இன்றைய நாளில் இருக்கிறது... இதனால் பணமில்லாத ஏழை மக்கள் தகுதி இருந்தும் கல்வி கற்க முடியாத நிலை பல இடங்களில்.... இது எல்லாம் மாற வேண்டும்.. மாற்றம் வரவேண்டும் என்றால் நம் அனைவரின் ஒத்துழைப்பும் அதற்கு மிக அவசியம்... எனவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் இந்த வழக்கில் நாங்கள் எதிர்பார்க்கிறோம்...”
“சார் நாங்கள் செய்தி போடுவது பெரிதில்லை... அவர்கள் அவர்களிடம் இருக்கும் பணத்தால் நாளையே ஜாமீனில் வெளிவந்து விடுவார்களே... பின் சாட்சிகளை கலைப்பது ஒன்றும் பெரிதில்லையே...”
“கைது செய்தவர்கள் அனைவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள்தான் போடப்பட்டுள்ளன... அப்படியே ஜாமீன் கோரி வழக்குத் தொடுத்தாலும் அதைக் கொடுக்கக் கூடாது என்று அதன் மீது வழக்குத் தொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்... எனவே குறைந்தபட்சம் இன்னும் இரண்டு மாதத்திற்கு அவர்களால் வெளிவர முடியாது....”
“நீங்கள் சொல்வது சரிதான் சார்... இந்த வழக்கில் எங்கள் ஒத்துழைப்பு உங்களுக்கு கண்டிப்பாக உண்டு... எந்த மாதிரியான நியூஸ் போடவேண்டும் என்று சொல்லுங்கள்.... அதையே நாங்கள் பிரசுரித்து விடிகிறோம்....”
“உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி... இந்த வழக்கின் முழு விவரத்தை உங்களிடம் கூறிவிட்டோம்... ஆனால் நீங்கள் முழு விவரத்தை நாளையே பதியாமல் பகுதி பகுதியாக பதியுங்கள்... அவர்களின் குற்ற செயல்கள் ஏற ஏற மக்களின் கொதிப்பும் ஏறும்... காவல்துறை தரப்பிலிருந்து தினம் உங்களுக்கு வழக்கை பற்றிய விவரம் வரும்... அதை நீங்கள் பிரசுரித்தால் எங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்....”, மதி கூற அனைவரும் அப்படியே செய்வதாக கூறி விடைபெற்றார்கள்....
பத்திரிக்கையாளர் சந்திப்பிற்குப்பின் மதியும், சந்திரனும் கிளம்பி மதி வீட்டிற்கு சென்றார்கள்... அங்கு சக்தி, சந்தியா, சந்தோஷ், பாரதி மற்றும் சாரங்கன் வந்து இவர்களுக்காக காத்திருந்தார்கள்...
“என்ன சீனியர்... பத்திரிக்கையாளர் சந்திப்பு எப்படி போச்சு.... தாறுமாறா கேள்வி கேட்டு உங்களை டென்ஷன் கிளப்பினாங்களா....”