(Reading time: 13 - 25 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

அப்பா” என அறிமுகபடலம் நடந்தது.

தனுஷோட  தாத்தா பாட்டி இவங்கஎன மற்ற இருவரையும் அறிமுகப்படுத்தினார்.

தனுஷ்க்கு அவங்க தாத்தா தான் எல்லாமே . . அவனோட பிரெண்ட் பிளாசபர் அண்ட் கைடு

அதெல்லா இல்லமா பிருந்தா . . இனிமே நீதான் அவனுக்கு எல்லாம்என தாத்தா சிரித்த முகத்துடன் பதிலுரைத்தார்.

பொண்ணும் பையனும் தனியா பேசட்டுமே  . . நாம பேசிட்டு இருந்தா எப்படி?” பாட்டி தாத்தாவை லுக்விட்டுசும்மா இரும்என அன்பு கட்டளையிட்டார்.

சௌமி அக்காவை மாடிக்கு கூடிட்டு போமா . . நீங்களும் போங்க தனுஷ்என மூர்த்தி சொன்னான்.

வாக்கா வாங்க மாமாஎன சௌமி  முன்னே சென்றாள்இருவரும் பின்த் தொடர்ந்தனர். “இப்பவே மாமான்னு கூப்பிடத்தஎன பிருந்தா சௌமிகு ஜாடை செய்தாள். சௌமி  வேண்டுமென்றே கண்டுக் கொள்ளவில்லை 

மாடியில் சில்லென்ற காற்று முகத்தில் பட இதமாய் இருந்தது. செடிகளும் கொடிகளும் சின்னச்  சின்னத் தொட்டிகளிலிருந்து பிறந்து வளர்ந்திருந்தன. செடிகள் தலையாட்டி சந்தோஷமாய் இருவரையும்  வரவேற்றது.   கொடிகள் அதற்கான பிடிமானங்களில் சுற்றி வளைந்து வளர்ந்திருந்தது . மலர்கள் ஒரு வித மணத்தை வீசியது.

மொட்டை மாடியில் ஒரு பக்கத்தில் சிறியதாக இரண்டு அறைகள் இருந்தன. வெளியே பெரியதாய் ஒரு சோபாவும் எதிரே மூங்கில் கூடைப் போன்றதொரு  ஊஞ்சலும் இருந்தது

அக்காக்கு கார்டனிங்  ரொம்ப பிடிக்கும். இந்த செடியெல்லாம் அக்காதான் வெச்சது. அதோட இந்த ஊஞ்சல் அக்காவோட பேவரெட்என மூங்கில் ஊஞ்சலை தனுஷிற்கு சௌமி காட்டினாள்.

கிரேட்என்றவன்  சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது “அக்கா நான் கீழ போறேன்.. வெக்கபடாம தெரியமா பேசுஎனக்  கிசுகிசுப்பாக தோளைத் தட்டி தைரியம் சொல்லிக் கீழே சென்றுவிட்டாள் தங்கை.

உள்ள வாங்கமுதன் முதலாய் பேசினாள் பிருந்தா. இனிமையான குரல் என அவன் மனம் இனித்தது.

அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றான். ஆனால் ஏனோஇங்கயே பேசலாமேஎனச்  சோபாவில் அமர்ந்துக் கொண்டான். அவள் தனக்கு பிடித்தமான ஊஞ்சலில் அமர்ந்தாள். அவளின் முயல் போன்ற கால்கள்  நிலத்தில் தடம் பதித்தது.

சில நொடிகள் மௌனமாய் கரைய அவள் தலைக் குனிந்தபடி தனது மோதிரத்தை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.