அவிழ்ப்பதும் போடுவதுமாய் இருந்தாள்.
“அம்மா சொன்ன மாதிரி எனக்கு பிரெண்ட் பிளாசபர் கெய்டு எல்லாமே என் தாத்தா தான். அவர்தான் என்னை வழிநடத்திட்டு இருக்கார் இப்பவரை” எனத் தொடங்கினான்.
“தாத்தா ரொம்ப வருஷம் முன்னாடி ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் பண்ற சின்ன பிளாண்ட் ஸ்டார்ட் பண்ணார். அடுத்து அப்பா அதை பெரிசாக்கினார். இப்ப என்னோடு டர்ன் . .” என அவனை பார்த்தான்.
அவள் கவனித்துக் கொண்டிருந்தாள். “பேக்டரில நிறைய டிசைன் டிசைனா பிரச்சனை வரும். வொர்க்கர்ஸ் தேவை புரிஞ்சி நடந்துக்கணும். நல்லவங்க கெட்டவங்க எல்லாக் கேட்டேகிரியும் இருப்பாங்க.” நிறுத்தி ஆழமாய் மூச்சுவிட்டவன். அவன் கண்கள் திறந்தபடி கனவு காண்பதை பிருந்தாவால் உணர முடிந்தது.
“தாத்தா எனக்கு ஒரு சேலஞ்ச் குடுத்திருக்கார்.” என்றவன் அவளை ஆழமாய் பார்த்தான்.
“முதல்ல ஒரு மனுஷனோட ஆசை கனவு விருப்பம் எல்லாத்தையும் நிறைவேற்ற முடிஞ்சாதான். பலதரபட்ட மனிதர்கள் அண்ட் மிஷின்கள் இருக்கிற பேக்டிரிய ஹேண்ட்ல் பண்ண முடியுமாம். இது அவர் ஐடியாலஜி ” எனச் சொல்லி சிரித்தான்.
அவன் சொன்னதன் அர்த்தம் புரியாமல் அவள் புருவங்கள் சுருங்க அவன் விரிந்த புன்னகையுடன் “இட்ஸ் சிம்பிள் என் மனைவி தனுஷ் ஒரு நல்ல கணவன்னு சர்டிபிகேட் கொடுத்தாதான் பேக்டிரி முழுமையா என் கண்ரோல்க்கு வரும்”
“ஓ!!” என்றாள். இத்தனை பெரிய பிரசங்கத்திற்கு இத்தனை சிறிய பதிலை நிச்சயமாய் அவன் எதிர்பார்க்கவில்லை.
“உங்கள பத்தி சொல்லுங்க” என்றான்
“பி.ஈ முடிச்சி ஒன் இயரா வொர்க் பண்றேன்” என சுருக்கமாக முடித்துவிட்டாள். அவளுள் நடுக்கம் உழன்றபடி இருந்தது.
“ தாத்தா சொன்ன கோர்ஸ் படிச்சேன். அவர் சொன்ன வேலையும் செய்றேன். அவர்தான் எங்க குடும்பத்தோட முதுகெலும்பு” என்றவன் தன் தாத்தாவின் அருமை பெருமைகளை சொன்னான்.
இன்னும் சிறிது நேரம் சம்பரிதயமான உரையாடல் சென்றது. அவள் அதிகம் பேசவில்லை. தாத்தா பற்றியே அதிகம் பேசினான்.
பிறகு “கீழ போலாமா?” அவள் கேட்க
அவளுடன் இன்னும் உரையாட நினைத்தவன் ஏமாற்றமாய் “யா” என எழுந்தான்.
இருவரும் கீழே வர அனைவரும் அவர்கள் முகத்தை தங்கள் கண்களால் ஸ்கேன் செய்தனர். பிருந்தா தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.