செக்சி லேடி?" என கேட்க, அவனின் கேள்வியில் அவள் முகம் மாறியது. கீழே குனிந்து டம்பளரை எடுத்தவள் அவனுக்கு பதில் சொல்லாமல் திரும்பி சமயலறைக்குள் செல்ல, அவனும் தோளை குலுக்கி கொண்டு வேறு உடை மாற்ற மேலே சென்றான்.
மீண்டும் வேறு ஒரு டம்பளரில் ஜூஸ் தயாரித்து எடுத்து கொண்டு விசாலத்தின் அறைக்குள் நுழைந்தவள் அவரிடம் அதை கொடுக்க, "ஹாய் பாட்டி" என்றபடி உள்ளே வந்தான் அவன். அவன் குரலிலேயே அவன் தான் என்பதை உணர்ந்தவள் அந்த புறமாக நகர்ந்து நிற்க, அவனோ அவள் ஒருத்தி அங்கே இருப்பதையே கவனிக்காமல் நேராக விசாலத்தின் அருகே சென்று அவரின் கழுத்தை கட்டி கொண்டு அவரின் கன்னத்தில் முத்தமிட்டான்.
"என்னடா வந்ததும் கிளம்பிட்ட?" விசாலம் கேட்க, "மூணு நாள் அவுட் ஆப் ஸ்டேஷன் பாட்டி. நெறைய வேலை பெண்டிங் இருக்கு. அதான். அப்பறம் நீங்க என்ன மூணே நாளுல பத்து வயசு குறைஞ்ச மாதிரி அழகா யங்கா ஆயிட்டீங்க" என்றான் அவரின் மோவாயை பிடித்து கொஞ்சியபடி.
"போடா சும்மா ஐஸ் வெக்காத" என விசாலம் வெட்கப்பட, "நோ பாட்டி சீரியஸ்லி யூ லுக் யங் அண்ட் பிரைட்" எனவும் "எல்லாம் இந்த செல்வியோட கைவண்ணம் தான். ஹெல்தி புட், ஜூஸ்னு கொடுத்து மூணே நாளுல என்னை இன்னும் இளமை ஆக்கிட்டா" எனவும் அப்போது தான் அங்கே அவள் இருப்பதையே பார்ப்பது போல திரும்பியவன், "ஹாய் ஐ யாம் ராம். ஸ்ரீராம்." என தன்னை அறிமுக படுத்தி கொள்ள, வெளியே அப்படி பேசியவனா இவன் என்ற குழப்பத்தில் வாயடைத்து நின்றிருந்தாள் தமிழ்செல்வி.
"என்ன பாட்டி உன் செல்வி பேசமாட்டாங்களா?" என அவன் அவளை பார்த்தபடி பாட்டியிடம் கேட்க, "என் பேரு தமிழ்செல்வி" என அவனுக்கு பதில் சொன்னாள்.
"கூல், அப்பறம் தமிழ்செல்வி, இதுக்கு முன்னாடி எங்க ஒர்க் பண்ணுணிங்க? என்ன படிச்சிருக்கீங்க? உங்க வீடு எங்க இருக்கு?" என அவன் கேள்வி மேல் கேள்வி கேட்க, "டேய் அவ என் அப்பாயிண்ட்மென்ட். அவகிட்ட எனக்கு தேவையான கேள்வி எல்லாம் நானே கேட்டுட்டேன். நீ ஒன்னும் இனி இன்டெர்வியூ பண்ண வேண்டாம்" என விசாலம் சொல்ல, "ஓ....ஓகே பாட்டி நீங்க சொன்னா சரி தான். சரி நான் கிளம்பறேன். ஈவினிங் வர லேட்டாகும். எனக்காக வெயிட் பண்ணாதீங்க. பை" என அவரின் கன்னத்தில் அவன் முத்தமிட இன்னும் குழப்பம் மாறாமல் அவனையே பார்த்து கொண்டிருந்த தமிழ்செல்வியை பார்த்து பாட்டிக்கு தெரியாமல் கண்ணை சிமிட்டி விட்டு அவன் வெளியே செல்ல, இப்படியும் ஒரு நடிகன் இருப்பானா என அதிசயித்து போனாள் தமிழ்செல்வி.
மாலை நேரம் சரியாக சொன்னது போல வந்தான் அசோக். வழக்கம் போல பாட்டிக்கு செய்ய