(Reading time: 15 - 30 minutes)
Priyamaanavale
Priyamaanavale

அந்த புத்தக கடையை நோக்கி அவள் செல்ல அதன் எதிர்புறம் இருந்த ஒரு மேற்கத்திய ஆடை விற்கும் ஒரு கடையில் இருந்து வெளியே வந்தான் ஸ்ரீராம்.

அவனை கண்டதும் சட்டென அந்த புறமாக ஒதுங்கி நின்று கொண்டாள் தமிழ்செல்வி அவன் காணாத வண்ணம். அவள் ஏன் அப்படி நின்றாள் என கேட்டால் அவளுக்கு விடை தெரிந்திருக்காது தான். பார்க்காமல் தவிர்க்கவேண்டும் என்று எண்ணி முழுதாக ஒரு மணி நேரம் கடக்கும் முன் மீண்டும் அவன் அவள் கண்பார்வையில் பட்டதாலோ என்னவோ....

அவளை கடந்து அவன் போகவும் அவள் அவன் போன திசையை பார்த்தாள்.  கீழே செல்லும் தானியங்கி படிக்கட்டில் இறங்கியவன் கையை பற்றி கொண்டு அவனிடம் சிரித்து பேசி கொண்டிருந்தாள் ஒரு பெண். அவள் கையில் அந்த கடையின் பை இருந்தது. அவள் ஏதோ சிரித்து சிரித்து பேச அவன் பதில் சொன்னபடி இறங்கி கொண்டிருந்தவன் சட்டென அவன் இருந்த திசையை திரும்பி பார்க்க அதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை தமிழ்செல்வி. சிலநொடிகள் அவன் கண்கள் அவளையே பார்க்க, அவளுக்கு சிரிப்பதா என்ன செய்வது என விளங்காமல் திரு திருவென விழித்தபடி நிற்க, அவனின் ஒற்றை புருவம் மேலேற அவளை பார்த்தவன் காலையில் பார்த்ததை போலவே இப்போதும்  அவளை பார்த்து கண்ணை சிமிட்டி விட்டு செல்ல, பேயறைந்ததை போல நின்றாள் தமிழ்செல்வி.

தொடரும்

Next episode will be published on 6th June. This series is updated weekly on Saturday mornings.

Go to Priyamaanavale story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.