Page 11 of 20
“என்னமா !! இந்த பொண்ணுங்களே இப்படித்தான்... கழுத்துல தாலி ஏறுச்சுனா போதும்.. புருஷன் மேல உடனே ஆசை பாசம் எல்லாம் பொத்துகிட்டு வந்துடும்.. உன் புருஷன் இன்னும் சாப்பிட வரலைனு நீயும் விரதம் இருக்கறையாக்கும்..
அவனை எல்லாம் நீ எதிர்பார்க்காதே... அவன் எப்ப வேணா வருவான் எப்ப வேணாலும் சாப்பிடுவான்.. அவனுக்காக நீ காத்திருக்காத.. " என்று நமட்டு சிரிப்பை சிரித்தார்..
...
This story is now available on Chillzee KiMo.
...
நாதனை பார்க்க அவரோ கண்ணால் ஏதோ ஜாடை செய்தார்..
அவளும் அமைதியாக உட்கார்ந்து விட, அவள் அருகில் வந்தவன்
“ஏய் எழுந்திரு.. இது என் இடம்.. " என்று முறைத்தான்..