மெடிக்கல் பேடை எடுத்து சில டெஸ்ட்டுகள் குறித்துக் கொடுத்தார்.
" இதையெல்லாம் நீ நகரத்தில்தான் செய்துவிட்டு வரவேண்டும் நந்தினி. இந்த டெஸ்ட் ரிப்போர்டை வாங்கி வந்துவிடு. இது ஒரு அடிப்படை டெஸ்டுகள் மட்டுமே. குழந்தைகுரிய கன்ஃபர்மேஷன் டெஸ்டுகளை அடுத்த மாதம்தான் முழுமையாக செய்ய முடியும். உனக்கு இது திருமணம் முடிந்து நான்காவது வருடம் என்பதால் நாம் கொஞ்சம் இதில் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்... புரிகிறதா?. இப்பொழுது கொஞ்ச நாளைக்கு ஜாக்கிரதையாக இரு. நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள். " தொடர்ந்து..
"ப்ரைமி என்பதால் கவனம் தேவை. மூன்று மாதங்களுக்கு பின் நீ இன்னும் சில டெஸ்டுகள் எடுக்க வேண்டும். குழந்தை வளர்ச்சி பற்றிய டெஸ்ட் அது. அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்."
"சரி டாக்டர். அது என்ன டெஸ்ட்" நந்தினியின் அம்மா கேட்க… ஷீலா விளக்க ஆரம்பித்தார்.
அங்கிருந்து ரேச்சல் மெல்ல நகர்ந்து தன்னுடைய அறைக்கு வந்தாள். அவளுக்குள் அதீத குழப்பம் இருந்தது…. அந்த சத்யா ஏன் கனவில் வந்தான்… அதுவும் ரொம்பவும் எம்பாரஸிங்காக…!
"ரேச்சல்… இங்கே வா உனக்கு நியூயார்க்கில் இருந்து ஜெமி போன் பண்ணி இருக்கான்."
ஷீலாவின் குரல் கேட்டு அவள் அங்கு விரைந்தாள்.
"ஜெமி போன் பண்ணி இருக்கான். நீ எங்கே என கேட்டுக்கிட்டு இருக்கான். அவன் நெக்ஸ்ட் வீக் இங்கு வர்றானாம். உன்கிட்ட பேசணும்னு சொன்னான்... பேசு' என்று அவளிடம் அலைபேசியை நீட்டினார்.
"ஹாய் ஜெமி நீங்க எப்படி இருக்கீங்க?. " என்று ஜெமி கிரிஸ்டோபரிடம் பேசினாள்.
"ஐம்… குட்! ஹவ் ஆர்யூ? இப்போ நான் இந்தியாவுக்கு வருவதற்கு பிளான் பண்ணி இருக்கேன். உங்களை பார்க்கதான் வர்றேன். நெக்ஸ்ட் வீக் அங்க வரேன். அங்கு எனக்கு இருக்கின்ற ஒரே தோழி நீதான். நீ உன்னோட நேரத்தை எனக்காக ஒதுக்கி வச்சிக்கோ"
"ஓகே நான் ப்ளாக் பண்ணிடுவேன். உங்களை ஏர்போர்ட்ல வந்து நானும் மம்மியும் ரிசீவ் பண்ணுகிறோம்' என்று சொன்னாள்.
" முக்கியமா நான் ஆன்ட்டியை பாக்கணும். எவ்வளவு இழப்புகளை சந்திச்சிருக்கீங்க. அங்கிள் இறந்தது பெரிய இழப்பு. நான் உங்களுக்காக கொஞ்சம் முன்னாடியே வந்துருக்கணும். இடையில் எவ்வளவு பிரச்சினைகள் உன்னோட பேமிலி சந்திச்சிருச்சு. சாரி எனக்கு லீவு கிடைக்கல. இப்பதான் வர முடியுது. "