ரேச்சலை அப்போதுதான் பார்க்கிறாள்.. ஆனால் ஒரு உற்சாக கூச்சலை எழுப்பிக் கொண்டு ஓடி வந்து அவளை தூக்க சொல்லி கை நீட்டியது…
இயல்பாக மனுகுட்டியை தூக்கிய ரேச்சலுக்கு உடல் சிலிர்த்தது. மனுகுட்டி அவளுடைய கழுத்தை கட்டி கொண்டு கன்னத்தை கடித்தது.அது மனுவின் யுவர்ஸ் லவ்விங்லி குறிப்பு…!
வீட்டு ஆட்களுக்கே எப்போதாவதுதான் கிடைக்கும். கெஞ்சினாலும் கிடைக்காது.. ரேச்சலுக்கு எச்சில் முத்தங்கள் அமுத மழை என பெய்தது…
அங்கிருந்தோருக்கு. ஆச்சரியமாக இருந்தது. ரேச்சலுக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. உடல் ஜில்லிட்டது. அவள் இறுக பிடித்து அணைத்தபோது கொதித்திருந்த நெஞ்சம் தணிந்து குளிர்ந்தது.
தோட்டத்திற்கு சென்று திரும்பிய சத்யன் திகைத்தான்… வாட்ஸ் கோயிங் ஆன்?.
அவனை பார்க்கவும் திணறிப் போனவள்.. "இதை அம்மா உங்களுக்கு தர சொன்னார்கள்" என்று சொல்லி விட்டு மருந்தையும் மனுகுட்டியையும் நந்தினியிடம் தந்து விட்டு விரைந்து வெளியேறினாள்.
ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்தவள் நேராக அறைக்கு சென்று விட்டாள்.
"ஜீஸஸ்… என்ன நடக்கிறது.. அவனை பார்த்து உளறி வைக்கிறேன். அவன் எந்த சர்ட் போட்டால் எனக்கென்ன… ப்ளுவில் வெள்ளை கோடு போட்டதாம்… ரொம்ப முக்கியம்… அவன் வேறு திட்டி விட்டான். அத்தோட நிற்காமல் அவனோட குழந்தையை வேறு தூக்கி எமோஷனலா கொஞ்சியாச்சு. அவன் என்ன நினைப்பான்…?."
யோசிக்கும்போது அவளுக்கே அவளை பற்றி பிடிக்காமல் போனது. ஒருத்தனுடைய ட்ரஸ்ஸை ரசிப்பது தவறில்லை… ஒரு குழந்தையை கொஞ்சுவதும் தவறில்லை…
ஆனால் ஏதோ ஒரு நோக்கம் அவளுக்கு இருப்பதுபோல அடுத்தடுத்து நடந்தது. அவனுக்காக குழந்தையை கொஞ்சினாளா… இல்லை குழந்தைக்காக அவனிடம் நெருங்குகிறாளா?
ப்ச்… அட்ரோஸியஸ்.. இரண்டும் இல்லை… அவளுக்காக ஜெமி வருகிறான்… இந்த பூக்காரன் தேவையில்லை… அவளை ஸ்டுப்பிட் என்று வேறு சொல்லி விட்டான்…
இனி அவனை பார்க்க கூடாது…. நோ.. நோ.. அவனை பார்த்து ஸ்டுப்பிடாக அவள் என்ன செய்தாள் என்று கேட்க வேண்டும். அவன்தான் பழக தெரியாத காட்டு மிராண்டி… என்று சொல்ல வேண்டும். ஜெமியின் கையை பிடித்துக் கொண்டு அவன் முன் ரேம்ப் வாக் போகணும்…
ஓஹ்… இன்று ஏன் இப்படி மனம் அமைதியில்லாமல் தவிக்கிறது. அடுத்தடுத்து பேசிக்