கணக்கில் எடுக்க கூடாது… ரொம்பவும் குழம்பி விடுவோம் ]
அவர்கள் வீட்டு பக்கமே இனி.போகக் கூடாது என்று தீர்மானித்தாள். மறுநாளே அதை அவளே ப்ரேக் செய்யவும் செய்தாள்.
"ரேச்சல்… நந்தினியிடம் இந்த மருந்தை தந்துட்டு வா" என்று ஷீலா அனுப்ப,
"என்ன மருந்து?"
"வாமிட்ங்கா இருக்குனு சொன்னாள். அதை நிறுத்ததான் இந்த மருந்து"
அவள் அதை எடுத்து கொண்டு நந்தினி வீட்டுக்கு சென்றாள்.
பக்கத்து வீட்டின் கேட்டை திறந்து காம்பவுண்டிற்குள் கால் வைத்தாள். அவளையும் அறியாமல் இதயம் தடதடத்தது… அவன் வருவானோ…
அந்த தோட்டத்தில் பூ திருடிக் கொண்டு கூட அவன் இருக்கலாம்..! அவனை பார்க்கவே கூடாது… தரையை பார்த்து பார்வையை திருப்பியவள் விரைவாக நடந்தாள்… வாசலை தாண்டி வீட்டின் உள்ளே கால் பதித்த போது…
அவன் சரியாக அவள் முன் வந்து நின்றான்… வாட்சை கட்டியபடி வந்தவன் அவளை பார்க்கவும்,
"நந்து… உன்னோட ஃப்ரண்ட் வந்திருக்காஙக" என்று சொல்லி சினேகமாக சிரித்தான். அவன் அடுத்த அடியை எடுத்து அவளை கடக்கும் முன்…
"உங்களுக்கு அந்த ஸ்கை ப்ளூவில் ஓயிட் ஸ்ட்ரைப்ஸ் போட்ட சர்ட்தான் நல்லாயிருக்கும்"
அவன் திடுக்கிட்டு திரும்ப…
"ஆங்… அது நான்.. சும்மா…"
தன்னையறியாமல் உளறிய வாயை கட்டுபடுத்த முயற்சித்தாள்.
"ஸ்டுப்பிட் கேர்ள்" என்ற சொல்லி ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பினான்.
சட்டென நெஞ்சு கொதிக்க… திருவிழாவில் காணாமல் போன குழந்தை தாயிடம் அபயம் தேடி ஓடுவதுபோல… அவள் நந்தினியை தேடி ஓடினாள். அவன் திரும்ப வருவதற்குள் மருந்தை தந்து விட்டு வீட்டுக்கு ஓடிடனும்…!.
அங்கும் கூடத்தில் சோபாவின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு… அவளை கொதிக்க கொதிக்க முக்கி எடுப்பதற்காக ஒரு கப் ஹாட் சூப் காத்திருந்தது…
நோ… நோ..அப்படி சொல்லக் கூடாது… மல்லிகை செண்டு.. ஆப்பிள் டெசர்ட்… இட்டாலியன் டிலைட்… சாக்லெட் கேக்… எதெல்லாம் மனதிற்கு பிடிக்குமோ அதையெல்லாம் சொன்னாலும் சரியான உவமானம் ஆகாது…
மனுகுட்டி ஈஸ் மனுகுட்டி!