'நீதான கேட்டே"
"ஹலோ… நீங்கதான் சார் வாட் செங்கல்னு கேட்டீங்க… நான் அதை எதுக்கு கேட்க போறேன்?" சொல்லும் போதே அவளுக்கு புரிந்து விட்டது.
ஒருவேளை நாமதான் உளறிட்டோமோ…? செங்கல்… செங்கல்னு நினைச்சுட்டே இருந்ததால சொல்லிட்டோமோ..?
அய்யோ.. இவன் வேற… எதுக்கு கேட்டேனு கிளறிட்டு இருக்கான்… அம்மாகிட்ட சொன்னாலும் சொல்லுவான்… எப்படியாவது சமாளிப்போம்…
"என்னது நீ கேட்டியா நான் கேட்டேனா…?" ஜெமி குரல் உயர்ந்தது.
ஆங்… ரேச்சல்ட்ட குரல் உசத்துறானே… உடனே ஸ்டாப் பண்ணனும்…
"நான் செங்கல்னு சொல்லலை.. ஜெம் கல் சொன்னேன். நீதான் தப்பா கேட்டுருக்க"
"ஜெம்…. அது எதுக்கு?"
"லக்கி ஸ்டோன்பா?"
"எனக்கு அதெல்லாம் பிடிக்காது"
"உன்னை யார் போட சொன்னது. நான் எனக்கு கேட்டேன்" அசராமல் சொன்னாள்.
"ஜீஸஸ்… இதெல்லாம் நாம நம்ப மாட்டோம்னு உனக்கு தெரியாதா…?"
ஹா… அப்படியே யூ டர்ன் போட்ற டைம் வந்தடுச்சு…
" சாரி… இப்ப எனக்கு தெரிஞ்சுடுச்சு. இந்த மாதிரி விஷயமெல்லாம் நம்ம ஃபேமிலிக்கு பழக்கம் இல்லை. ஓகே… எனக்கு வேண்டாம். எதுவும் வேண்டாம்" என்று அழுத்தமாக சொன்னாள்.
ஜெமி அவளை முறைத்தான்.. தட்ஸ் குட் அப்படியே போய்க்கோடா…
"ஓகே… தேங்க் யூ. குட்நைட்" அவனும் கோபமாக சொன்னான்.
அப்பாடி… தப்பிச்சாச்சு...பெருமூச்சு விட்டாள்.
அழைப்பு துண்டிக்கப்பட காத்திருந்தாள். முந்திரி கொட்டை மாதிரி அவள் முன்னெடுத்து எழுந்து போகக் கூடாது. அம்மாவிடம் ஜெமிநல மனு தாக்கல் ஆகிவிடும்…
அவள் அமைதியாக திரையை பார்த்து கொண்டு இருந்தாள். ஜெமி படக்கென்று கட் செய்திருக்க வேண்டும்… ஆனால்..
திடீரென தொண்டையை செருமி கொண்டு பேச ஆரம்பித்தான்.
"ஓகே… ஓகே… கூல்… ஆங்… உனக்கு என்ன லக்கி ஸ்டோன் வேண்டும்"
அச்சோ விட மாட்டான் போலிருக்கு…
"இல்லை… வேண்டாம்… மம்மிக்கு பிடிக்காது."