செய்திருந்தது. அவர்களுக்கு பரிசு தர வேண்டும். அதற்காக கலாச்சாரம் சார்ந்த பரிசுப் பொருளை தேடிக் கொண்டு இருந்தான்.
அவனுடைய மனதில் பட்டு புடவைகள்தான் பரிசாக தர வேண்டும் என்று தோன்றியது. ஏனெனில் அந்த குழுவில் பெண்களும் இருந்தனர். ஆணகள்கூட தங்கள் மனைவிக்காக பட்டு புடவைகள் வாங்க வேண்டும் என்று சொல்லி இருந்தனர். அவர்கள் பாரம்பரியமான காஞ்சிபுரம் பட்டு புடவைகளை வாங்கினர். சத்யனுக்கு வித்தியாசமான வகையில் உள்ள புடவைகளை வாங்க விருப்பம்…
கடைவீதியில் அவனும் ரஞ்சனும் பல கடைகள் ஏறி இறங்கினர்.. எதற்கும் இருக்கட்டும் என்று கடைசியாக ஒரு கடைக்குள் சென்றனர். அது மிகவும் சிறிய கடை. அங்கிருந்த பெண் வரவேற்றாள். அவளிடம் பட்டு புடவைகளை பார்வையிட வேண்டும் என்று கேட்டனர்.
"சார்… பனாரஸ்… இது காஞ்சிபுரம்… ஆரணி… டபுள் பார்டர் இதில் எது வேண்டும்?"
"ஜஸ்ட் ஷோ மீ"
அவள் எடுத்து காட்டிய புடவைகள் வித்தியாசமாக இல்லை.
"இதெல்லாம் பழைய டிஸைன். புதுசா காட்டுங்க"
அவள் யோசனை செய்து உள்ளேயிருந்து சில புடவைகளை கொண்டு வந்தாள்.
"இதை பாருங்க… புது முயற்சி… கைகளாலேயே வரைந்த டிஸைன். ஒவ்வோன்றும் தனித்துவமானது. கஸ்டமர்ஸுக்கு பிடிக்கலை. அதனால உள்ளே வச்சிட்டோம்."
ஓ… சூப்பர்!. அந்த புடவைகள் அவன் எதிர்பார்த்த மாதிரி இருந்தது. டிரடிஸனல் பட்டு புடவையில் கலம்காரிபோல கையால் வரையப்பட்ட அழகிய டிசைன்கள் இருந்தன. மோனோ குரோமேடிக்… க்ராண்டா தெரிந்தது.
"இதுதான்… வேண்டும்"
"சார்.. இது விலை அதிகம் சார்…"
"ஓகே ஃபைன்… எனக்கு ஐந்து புடவை பேக் செய்யுங்கள்" என்று முடித்தான். அந்த புடவைகளைதான் பரிசாகவும் அளித்தான்.
அதை பிரித்து பார்த்தவர்கள் அசந்து போயினர். ஒவ்வோரு புடவையும் ஒரு கதை சொன்னது. ராமாயணம்… மகாபாரதம் மட்டுமல்ல… வீரம்… பாசம்… காதல்… நட்பு என்று விவரிக்கும் இலக்கிய பாடல்கள் சொல்லும் தமிழர் கதைகள் பல சொல்லின. ஓவ்வோரு புடவைக்குமான விளக்கம் அதனுடன் இருந்த பேம்லெட்டில் இருந்தது.. அவற்றை படிக்கவும் இன்னும் அதன் அருமை கூடிப் போனது. அலர்களுடைய பாராட்டுகளை கையோடு கொண்டு சேர்க்க விரும்பி அந்த கடைக்கு சென்றான்.