இருந்தாள். அவளுடைய மனுகுட்டி எங்கே… சப்தமே இல்லை… வீட்டில் யாரும் இல்லையோ? என்று யோசித்திருந்தாள்…
ஷீலா வீட்டின் முன்னறையில் இருந்த க்ளினிக்கில் நோயாளிகளை பார்த்து கொண்டிருந்தார். மேரி துணைக்கு இருந்ததால் ரேச்சல் அவளுடைய வேலைகளை பார்த்து கொண்டு இருந்தாள்.
தன்னுடைய வேலையை பார்த்து கொண்டு பக்கத்து வீட்டையும் பார்த்து கொண்டிருந்தவள் கண்ணில் தெருவில் ஆடி அசைந்து வண்டி ஓட்டி வந்த கல்பி பட்டாள்
'அவள் இங்கே எதற்கு வருகிறாள்? ஒருவேளை அம்மாவிடம் ரேச்சல் பற்றி கோள் மூட்ட வருகிறாளா?' கேள்வியுடன் பார்த்தாள்.
ஆனால் கல்பி அவளுடைய வீட்டையும் கடந்து பக்கத்து வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினாள். என்ன விஷயம்?
கூடையில் இருந்த சாப்பாட்டு கேரியரை அவள் எடுத்தாள். ரேச்சலுக்கு புரிந்து விட்டது. அது அந்த பூக்காரனுக்கான சிக்கன் குழம்பு.. ஃப்ரி ப்ரமோ…! இங்கேயுமாடி கடை போட பார்க்கிறாய்? அவளுக்கு கோபம் வந்தது.
சட்டேன எழுந்து ஸ்டூலை போட்டு மேலே ஏறி லாஃப்டில் வைத்திருந்த உண்மையான காட்டாபெல்ட்டை எடுத்தாள்.
சிறு கல்லை அதில் பொறுத்தி ஜன்னல் வழியே பார்த்தாள். அந்த டிபன் கேரியர் கல்பியின் கையை விட்டு பறக்கனும்…!
ஆனால் அதற்குள்ளே கதவை தட்டி கல்பி வீட்டிற்குள் சென்று விட்டாள். சத்யனிடம் கேரியரை தந்து விட்டு வெளியே வந்து விட்டாள்.
இனிமேல் அவளை அடிச்சு ஒண்ணும் ஆகப் போவதில்லை… ரேச்சலின் காட்டா பெல்ட சத்யனை தொடர்ந்தது.
அவன் அதை எடுத்துக் கொண்டு மாடிக்கு செல்வதும்… பால்கனியில் ஒரு மேஜை மீது வைப்பதும் தெரிந்தது. சாப்பாட்டு கேரியரை பிரித்து பார்த்ததும் … அவளுக்கு கோபம் வந்தது.
'ஓசியில் கிடைச்சா சாப்பிட்றதா… யாரு என்னனு பார்ப்பதில்லையா?.... மிஸ்டர் பூக்காரன் நீ அதை சாப்பிடக் கூடாது என்று இந்த ரேச்சல் தீர்மானித்து விட்டாள்… என்ன நடக்கப் போகுதுனு இப்ப பாரு…
அவள் கையிலிருந்து கல் பறந்தது… மேஜை மீதிருந்த கோழிக் குழம்பு கொக்கரக்கோ என்று பறந்தது… வாவ் குட் ஷாட்!
அவள் பாத்திரத்தை பறக்க விட்டபின்… சட்டென குனிந்து ஒளிந்து கொண்டாள். அவன் கண்ணில் பட்டுவிடக் கூடாது….
ஆனால் சத்யனுக்கு பறந்து வந்த கல்லை பார்க்கவும் புரிந்து விட்டது… இது அந்த 'குரங்கோட' வேலைதான்… பல்லை கடித்தான். அவளை என்ன செய்வது?...
தொடரும்
Next episode will be published on 7th July. This series is updated weekly on Tuesday evenings.