(Reading time: 15 - 29 minutes)
Nenchil thunivirunthaal

"தர்மா?" எண்ணற்ற வினைக்களை மௌனமாகத் தொடுத்தார் அவர்.

"கௌரி கர்ப்பமாக இருக்கா!" என்று உண்மையை அவர் உடைத்துவிட, ஆடிப்போனார் இராகவன். உடைந்துப் போய், வார்த்தைகள் அற்று தவித்து நின்றார் அவர்.

"என்னப் பண்ணப் போறீங்க?" அவர் மொழிகள் சற்று கடுமையாகவே வெளிவந்தன.

"உங்கக்கிட்ட தான் கேட்கிறேன்!" நீண்ட மௌனம் அங்கு நீடித்திருந்தது.

"க...கருவை...கலைத்துவிடலாம்!" சற்றும் காருண்யமின்றி வெளிவந்தன அவர் மொழிகள்! ஒரு நீண்ட பெரும் அமைதி அங்கு குடிக்கொண்டிருந்தது. தர்மாவிடமிருந்து எவ்வித தொழிகளும் இல்லை.

"என்னால உன்னையும், என் பையனையும் இழக்க முடியாதுத் தர்மா! கௌரி நமக்குள்ள வருவதை என்னால ஏற்றுக்க முடியலை. நான் செய்தது மிகப்பெரிய தப்புத்தான்! அதற்காக நீ என்னத் தண்டனைத் தந்தாலும் நான் ஏற்றுக்கிறேன். கௌரியை எங்கேயாவது அனுப்பிடலாம்! அவ சந்தோஷமாக வாழட்டும்! அவளுக்கு என்ன உதவி தேவைனாலும் செய்துத் தரலாம். இது அமைதியாக விடுவதுத் தான் நல்லது." கரம் கூப்பி மண்றாடினார் அவர். தர்மாவிடம் எவ்வித விடையுமில்லை.

"சரி...! அதை நானே செய்யுறேன். ஆனா, உங்களை நான் மன்னிப்பதாக இல்லை.!" என்று ஒற்றை வார்த்தையில் விடை நல்கியவராய் அறை நீங்கி வெளியேறினார் தர்மா.  காலத்தின் சுவடுகள் கண்ணாடியாக உருமாறி அவரை ஆழமாய் தைத்தன.

"னக்கு இந்தக் குழந்தையை பெற்று எடுக்க விருப்பம் இருக்கா? இல்லையா?" அதட்டலாய் வெளியான குரல் கௌரியினை அதிர வைத்தது. நடுங்கும் தேகத்துடன் தர்மாவின் எதிரில் நின்றிருந்தார் அவர்.

"பதில் சொல்லு!" மிரட்டலோடு அவர் கேட்க, அவரிடமிருந்து வெளியானது எல்லாம், 'இல்லை' என்ற தலையசைப்பு மட்டுமே! அவ்விடை கிட்டிய மாத்திரமே ஆடிப்போனார் தர்மா.

"என்னடி சொல்ற?" அதிர்ந்துப் போன வார்த்தைகள் அவர் மனதினைத் தெளிவாய் வெளிப்படுத்தின.

"நான் என்னம்மா பண்ண முடியும்? உங்க பொறுப்புல இருந்த ஒரே காரணத்துக்காக இன்னிக்கு என் வாழ்க்கையையே அழித்துவிட்டீங்க! நான் ஒருத்தரை மனதார காதலிக்கிறேன். இந்தக் கருவோட அவர் கூட என்னால எப்படி வாழ முடியும்? என்னை ஏற்றுக் கொள்வாரா அவர்? என் வாழ்க்கையே நாசமா போயிடுச்சு?" என்று கதறி அழுதார் கௌரி. தர்மாவிடம் நிறைந்திருந்தது எல்லாம் அதிர்ச்சி ஒன்றே!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.