சிலையாகிப் போனார் அவர். அவனிடமிருந்த சிரிப்பு முழுதாக அடங்கிப் போய் கண்ணீர் பெருக்கெடுத்தது.
"என்னடா உளர்ற? நான்தான்டா உன் அப்பா!" மீண்டும் அவனை அவர் அறைய முயல,
"பொய் சொல்லாதே!" என்று எழுந்தவனைக் கண்டு திகைத்துப் போனார் சூர்ய நாராயணன்.
"எனக்கு எல்லாம் தெரியும்!" என்றவன் தன் கையிலானக் காகிதத்தினை அவர் முன் காட்டினார். அன்று அசோக்கிடத்தில் அவர் சமர்பித்த வெள்ளைத் தாள்களின் மாதிரி அவனிடத்தில் இருந்தது.
"நீ என் அப்பான்னா!இது பொய்யா?" ஆதாரத்துடன் அவன் வினவ, உறைந்துப் போனார் அவர்.
"லாயர் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு! உன்னுடைய வாரிசு அதோ அந்தக் கலெக்டர்னு சொன்னாரு! அப்போ நான் யாருன்னுக் கேட்டா... அப்பன் பெயர் தெரியாதவன்டா நீ! இத்தனை வருடமா என்னுடைய முதலாளியை ஆட்டிப் படைத்திருக்கியான்னு என்னிடமே கேட்டார்!" காத்த அனைத்து இரகசியங்களும் உடைந்துப் போக தன்னிலை மறந்தார் சூர்ய நாராயணன்.
"நீ...நீ...என்கிட்ட ஒரு உண்மையை சொல்லு! நீ என்னுடைய அம்மாவுக்குத் துரோகம் செய்தே தானே!" புதிரான முடிச்சினை அவன் போட குழம்பிப் போய் நின்றார்.
"அம்மா உன்னை மனதார விரும்பியதாகவும், அந்தத் தர்மா உன்னை அம்மாக்கிட்ட இருந்து பிரித்ததாகவும் சொன்னது உண்மையா?" அவன் கேட்டுவிட எங்கிருந்துத் தான் அவ்வளவுக் கோபம் எழுந்ததோ அவருக்கு, தன் மகன் என்றும் பாராமல் அவன் கழுத்தினை இறுகப் பற்றினார் சூர்ய நாராயணன்.
"யாருடா? உங்க அம்மாத்தான்டா என் வாழ்க்கையே நாசம் பண்ணா!" சட்டென கோபத்தில் உண்மை வெளிவர உறைந்துப் போனான் அதர்வ். கோபம் எதனையும் சாதிக்காது என்று உண்மை அச்சமயம் அவருக்கு விளங்கவில்லை.
"அதர்வ்! நீ நிதானமா இரு! இதெல்லாம் எதுமில்லை..." என்றவரின் கரங்களை உதறிவிட்டான் அவன்.
"என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லு! எனக்கு உண்மை தெரியணும்...இல்லைன்னா!" என்றவன் தன் அருகிலிருந்த சிறு கத்தியை எடுக்க ஸ்தம்பித்தார் சூர்ய நாராயணன். எதிர்நோக்கா விதமாக அதனை தன் கழுத்தில் வைத்தவனாய்,
"உண்மையை சொல்லு! இல்லைன்னா நானே அறுத்துப்பேன்!"என்று மிரட்டினான் அவன்.
"டேய் பாவி! சொல்றேன்! சொல்றேன்!" பதறியவராய் அவன் தாய் செய்த அனைத்து நற்செயல்களையும் கூறினார் அவர். அனைத்தையும் செவிமடுத்தவனது கையிலிருந்த கத்தி