(Reading time: 12 - 23 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி

சாவகாசமாக விடிந்த அக்காலைப் பொழுதினை எப்போதும் போல் அன்றி சற்றே விசித்ரமாக வரவேற்றனர் தந்தையும், மகனும்! அத்தனை ஆண்டுகள் சென்றிருப்பினும், உடல்நலம் தேறியப்பின்னால் உடற்பயிற்சி செய்வதனை மட்டும் மறவவில்லை சூர்ய நாராயணன். தனது இளம் வயதிலும், அவரது வேகத்திற்கு ஈடுக்கொடுக்க இயலாமல் திணறி நின்றான் அசோக்.

"என்னாச்சு?" திடக்காத்திரமாக வினவிய தன் தந்தையினை நோக்கி, "இயலவில்லை" என்றுத் தலையசைத்தான் புதல்வன்.

"ம்...இந்த வயசுல இது கூட முடியலை. நீயெல்லாம் என் வயசு வந்தா அவ்வளவுத் தான் போல!" என்று கேலி செய்தார் அவர். அவனிடத்திலிருந்து மெல்லியப் புன்னகை வெளியானது. ஓட்டத்தினை நிறுத்தி காலர நடக்கத் தொடங்கினர் இருவரும்!

"நான் ஊருக்கு வரும்போது நீங்க எங்கே போயிருந்தீங்க? ஏன் நீங்க இல்லை?" மனதினை உறுத்திக் கொண்டிருந்த வினாவினை வைத்துவிட்டான் அசோக்.

"ம்? ஒரு சின்னக் குற்றவுணர்வு! அந்த வீட்டில் தான் அவளை நான் கடைசியா பார்த்தது. உனக்கு அந்தக் கோபம் இருந்திருக்கும்! எதுக்கு அதை அதிகப்படுத்தணும்னு தான் வெளியே போயிட்டேன்!" எவ்வித பொய்மையும் இன்றி மெய் புகலினார் அவர்.

"எங்கே போனீங்க?" மீண்டும் வினவினான் அவன்.

"அதுவா..." சூர்ய நாராயணனின் முகத்தில் மெல்லிய நகை மலர்ந்தது.

"தர்மா என்கிட்ட அவளுடைய காதலை சொன்ன இடத்துக்கு! என் வாழ்க்கையில மறக்க முடியாத இடம் அது! அங்கே தான் எங்களுடைய பயணம் தொடங்கியது!" அவரது கண்களில் ஏக்கங்கள் வழிந்தோடுவதனை அவன் கவனிக்காமல் இல்லை.

"இன்னிக்கு வரைக்கும் நான் யோசிக்கிறதெல்லாம் ஒரு ஐந்து நிமிடம் அவள் எனக்கு அவகாசம் கொடுத்திருக்கக் கூடாதான்னு மட்டுந்தான்! ஒருவேளை, அந்த ஐந்து நிமிட அவகாசம், எனக்குப் புரிய வைத்திருக்கும் எனக்கு என்னுடைய  கௌரவத்தைவிட அவத்தான் முக்கியம்னு! நான் செய்த தவறுக்கு ஒருமுறை கூட அவ என்னைப் பார்க்கணும்னு நினைக்கலைன்னு தோணும்போதுத் தான் எனக்கு வேதனையா இருக்கும்!" என்றவரின் கண்கள் கலங்கியிருந்தன.

"இல்லைப்பா! அம்மாக்கு அந்த ஆசை இருந்தது!" என்று புதல்வன் உரைக்க திடுக்கிட்டு நின்றார் அவர்.

"நீங்க வருவீங்கன்னு அவங்க நம்புனாங்க!சொல்லப்போனா உங்களுக்காகத் தான் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தாங்க! ஒருவேளை, உங்க நிலைமை அவங்களுக்குத் தெரிய வந்திருந்தா அவங்க நிச்சயம் உங்களை வந்துப் பார்த்திருப்பாங்கப்பா!" என்றுத் தன் தாயின் நிலையை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.