அமர சொன்னாள்.
கீழே எப்படி அமர முடியும் என்று யோசித்தவன் குனிந்து தன் ஜீன்ஸ்ஸை பார்த்தான்.
அவளோ அது புரியாமல் ராகவ் சீக்கிரம், சர்ட்டை கழற்றி அந்த ஆணியில் தொங்க விட்டு விட்டு அமருங்கள் என்று அவசரப்படுத்த, அவனுக்கோ வலி வேதனையை விட இவளே அதிக வேதனைப் படுத்துவது போல் இருந்தது.
அவன் எதுவும் பேசாமல் யோசனையுடன் நிற்பதைப் பார்த்தவள் வேகமாக எழுந்தவள் அவன் அருகில் சென்று சர்ட் பட்டனை கழற்ற ஆரம்பித்தாள்.
பெண்களுக்கு மட்டும் தான் வெட்கம் நாணம் உண்டென்று யார் சொன்னது... இங்கே ஆடவனோ அவளின் செய்கையில் இரண்டடி நகர்ந்து பின்னே சென்று விட்டான்.
அவளோ விடாமல் அவன் கையை உரிமையாக பற்றி இழுத்தாள். அவனோ மறுத்து பேச அவள் முகத்தை பார்த்த அடுத்த நொடியே தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இயங்கும் குழந்தை போல அவளையே பார்த்து கொண்டு அப்படியே நின்றான்.
அவளது பேச்சிலும் செயலிலும் இருந்த மென்மையும் அன்பும் அவனை கட்டி இழுத்தது. அடிப்பட்ட பக்கம் மெதுவாக சட்டையை கழற்ற அவன் கண்கள் கழங்கி வெளியே வர துடித்து கொண்டிருந்தது நீர்.
இது தான் தாயின் அன்போ... இதற்காக தானே ஏங்கி தவித்தேன். என்னை விட சிறியவள், இவள் அன்பில் என் ஏக்கம் குறைகிறதே... ஆனால் ஏன் நான் உயிராய் நினைக்கும் என் தாயின் அருகாமை என் ஏக்கத்தை குறைக்காமல் என்னை ஏன் ஏங்க செய்தது என்று யோசித்தான்.
காதல் ஒரு பித்தலாட்ட உலகம். அதற்குள் சென்றவன் முழுமையாக வெளியே வருவதில்லை என்று யாரோ என்றோ சொன்னது சம்பந்தம் இல்லாமல் அப்போது நினைவு வந்தது.
இவளை நான் காதலிக்கிறேனா... காதல் என்றால் என்ன... நான் ஏன் இவளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.... இவள் ஏதோ வசியம் செய்து விட்டாளா... இவளைப் பார்த்த பிறகு தான் என் தாயிடம் பலமுறை பொய் பேசி இருக்கிறேன்.
இன்னும் மூன்று நாள் தாமதித்து செல்லலாம் என்று கூறிய தாயின் வார்த்தையை மறுத்து ஏதேதோ காரணம் கூறி இவளை காண ஓடோடி வந்தேன்... இதற்கு காரணம் என்ன...
இவள் திட்டமிட்டு என்னை இவள் வலையில் விழ வைக்கிறாளா... பணத்திற்காக எதையும் செய்யும் பச்சோந்தி கூட்டத்தை சேர்ந்தவளா இவள்... இவளே ஆள் வைத்து அடித்து விட்டு என்னை அவளோடு அழைத்து வந்து விட்டாளா... நானும் புத்தி கெட்டு இவள் பின்னே வந்து விட்டேனா... இப்போது என்ன செய்வது என்று அறிவு யோசிக்க மனமோ கள்ளுண்ட வண்டு போல அவள் சொல்வதை செய்து கொண்டு இருந்தது.