கொண்டு உறங்கி இருந்தான் ராகவ்.
அவன் இதயம் சீராக துடித்து கொண்டிருந்தது. ஆனால் அவள் மனமோ ஏதோ ஆபத்து என்று உணர்த்தி கொண்டே இருந்தது.
குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டவள் உனக்காகவே உயிர் வாழ்கிறேன்.... உயிர் கொடுத்தாவது உன் உயிர் காப்பேன். பிராமிஸ் என்று சொல்லி விட்டு எழ முயற்சி செய்தாள்.
அவள் கையை பிடித்து இழுத்தவன், உனக்காகவே உயிர் வாழ்கிறேன்....பல உயிர் எடுத்தாகிலும் உன் உயிர் காத்திடுவேன் எனதுயிரே என்றான்.
பெண்ணவள் அதிர்ந்து விட்டாள். அவன் அருகில் சென்று கூர்ந்து பார்த்தாள். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது.
ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவன் பேசுவது அவன் ஆழ்மனதில் இருக்கும் நினைவுகளே... எனக்கு இவனோடு ஏதோ ஒரு உறவு இருக்கிறது என்று என் மனம் சொல்வது போல இவன் ஆழ்மனதிலும் நான் இருக்கிறேன். அப்படி என்றால் எங்களுக்குள் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று நினைத்தவள் அவன் வலது கையின் மேல் தனது வலது கையை வைத்து கொண்டு தியானத்தில் அமர்ந்தாள்.
அவள் மனக்கண்ணில் பல மாயத்தோற்றங்கள் தெரிய தொடர்ந்து மனதை அமைதி படுத்தினாள். சில காட்சிகள் தெளிவில்லாமல் தோன்ற இன்னும் மனதை ஒருமுகப்படுத்த ஆரம்பித்தாள்.
இன்னும் ஒரு நிமிடம் இதே ஒருமுகம் தொடர்ந்தால் அவள் கடந்த காலத்தை அவள் அறிந்து இருப்பாள். ஆனால் அதற்குள் அவள் எதிர்பாராத ஒன்று அங்கு செவ்வனே நடந்தேறியது. விதி யாரை விட்டது.... எழுதியதை நடத்தி முடிப்பவன் அல்லவா இறைவன்.... அவளின் அந்த குறுக்கு வழி தேடலை நிறுத்தி ஒரு சக்கரவியூகத்தை தொடங்கி வைத்தான் கடவுள்..
மீண்டு வருவாளா.... அவள் சந்திக்கும் மாய வலையை அறுத்து எறிந்து வெற்றி பெறுவாளா.... இவர்கள் ஏதோ ஒரு உறவு என்று நம்பும் அந்த ஒன்று இவர்களை காப்பாற்றுமா... இல்லை ஆழி அலையோடு சேர்த்து அமிழ்த்தி விடுமா??????
மும்பை...
அண்ணா.... நம்ம பசங்க இந்த தடவை மிஸ் செய்து விட்டாங்க... அந்த பொண்ணை அட்டாக் செய்யும் போது யாரோ ஒருத்தன் உள்ளே வந்து விட்டான் போல... அதனால்
இப்படி சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை... நீயெல்லாம்.... கண்டுபிடிக்கவும் லேட்... கண்டு பிடித்தவளை போட்டு தள்ளவும் லேட்.. உனக்கு இன்னும் இந்த ஆட்டத்தோட விபரீதம் புரியலை சத்யா..
சாரி அண்ணா... நானே நேரில போய்...