(Reading time: 11 - 22 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

குரலில் மரியாதை மிகுந்து இருந்தது.

ஓகே சிஸ்டர்... டூ மினிட்ஸ்ல வந்து விடுகிறேன் என்றான். 

இந்த குரலில் இருக்கும் அமைதியும் நம்பிக்கையுமே பார்ப்போரை கையெடுத்து கும்பிட வைக்கிறது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே வெளியே வந்த நர்ஸ் டாக்டர் சார் வருகிறார்கள்.. தைரியமாக இருங்கள். புற்றுநோய் முற்றி விட்ட நிலையில் தான் வந்து இருக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் பையன் பிழைத்து விடுவான் என்றாள்.

சொன்னது போல இரண்டே நிமிடத்தில் தயாராகி வந்த டாக்டர் சத்யா ஆப்பரேஷன் அறைக்குள் நுழைந்தார்.

அழுதுகொண்டே இருந்த அந்த பெண் மணியிடம் அருகில் இருந்த பெண் பேசினாள். பயப்படாதீங்க.. டாக்டர் புற்றுநோய் ஸ்பெஸலிஸ்ட்.. அவர் சரியாகிவிடும் என்று சொல்லி இருக்கிறார் அல்லவா.. அதனால் நிச்சயம் உங்கள் பையன் பிழைத்து விடுவான் என்றாள்.

அதை கேட்டு கொண்டு இருந்த பெண் கண்களில் ஒரு வித நிம்மதி பரவியது. 

அதை பார்த்து கொண்டு இருந்த விதி சிரித்தது. எமதர்மா உன்னை அழைப்பதும் இவர்களே... உன்னை விரட்டி விட்டதாக சொல்வதும் இவர்களே... காலம் வந்து விட்டால் காலனின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை இவர்கள் அறியாத முட்டாளாகி விட்டார்களே என்று எகத்தாளமாக சிரித்தது.

ஹலோ விதி... நான் அழைத்து செல்வதை விட வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்படும் எண்ணிக்கை அதிகமாகி விட்டதேடா... என்ன செய்வது என்று தெரியாமல் நானும் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று கன்னத்தில் கை வைத்து அமர்ந்து உலகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார் எமதர்மனும்...

தொடரும்

Go to Unakkaagave uyir vazhgiren story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.