புகைப்படங்கள் இருக்கிறதா என அந்த நோட்டு புத்தகத்தை திறந்தவனுக்கு முதல் பக்கத்தில் எழுதியிருந்த வார்த்தைகள் கண்ணில் பட்டது.
"அன்பான தமிழ்செல்விக்கு அம்மாவின் பரிசு..."
மெல்ல அதை திறந்தான். அதை அவள் ஒரு டையரியை போல உபயோகித்திருக்கிறாள் என புரிந்தது. தேதி குறிப்பிட்டு முக்கியமான நிகழ்வுகளை மட்டும் அதில் பதிவு செய்திருந்தாள். அவள் பள்ளி பருவம் தொட்டு நடந்தது எல்லாம் எழுதியிருந்தாள்.
ஒவ்வொன்றாக படித்து கொண்டிருந்தவனுக்கு சிலவற்றை படிக்கையில் சிரிப்பை அடக்கமுடியவில்லை. குறும்பு கார பெண்ணாக இருந்திருப்பாள் போல என்று புன்னகையுடன் திருப்பியவனுக்கு ஒரு பக்கத்தில் தண்ணீரால் அழிந்திருந்த எழுத்துக்கள் இருந்தது.
அவள் அன்னை இறந்த அன்று எழுதியிருக்கிறாள் என புரிந்தது. அது தண்ணீரால் அழியவில்லை அவள் கண்ணீரால் அழிந்திருக்கிறது என உணர்ந்து கொண்டான். அந்த தேதியை பார்க்கையில் அவளுக்கு பதிமூன்று பதினான்கு வயது இருக்கையில் அவர் அம்மா இறந்திருக்கிறார் என புரிந்தது. அதற்க்கு பின் வந்த நாட்கள் எல்லாம் அவள் அம்மாவிடம் பேசுவதை போல எழுதியிருந்தது.
ஒரு பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் ஏதோ எழுதியிருந்தாள். அந்த புகைப்படத்தில் ஒரு அப்பாவுன் மகனும் இருந்தனர். அதில் இருந்த பையனுக்கு ஒரு பதினைந்து வயது இருக்கும். கையில் இருந்த அந்த புகைப்படத்தில் தமிழ்செல்வியுடன் இருந்த அதே இளைஞன் தான் இது என புரிந்தது ராமிற்கு. அதில் எழுதி இருந்ததை படித்தான்.
"அம்மா இன்னைக்கு விச்சு அங்கிள் அவரோட பையனை கூட்டிட்டு வந்தார். நம்ம ஸ்கூல்ல அந்த பையனுக்கு அப்பா சீட் கொடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிருக்கார். அந்த பையன் பேரு தமிழ்மாறன். நாளைல இருந்து அவன் என் கிளாஸ் தான். இனிமேல் தமிழ்மாறன் அங்கிள் கூட தான் இங்க நம்ம குவார்ட்டர்ஸ்ல இருக்க போறான். என்னை மாதிரியே அவனுக்கும் டாக்டர் ஆகணும்னு ஆசையாம். எனக்கு ஒரு புது பிரென்ட் கிடைச்சிருக்கான்" அந்த நோட்டுப்புத்தகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோசத்துடன் எழுதி இருந்தாள்.
"தமிழ்மாறன்!!!" அவனுடைய பெயரை மீண்டும் சொல்லி பார்த்த ராம் அந்த புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை உற்று பார்த்தான்.
அடுத்தடுத்த பக்கங்களில் நிறைய இடங்களில் தமிழ்மாறனை பற்றி எழுதி இருந்தாள். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என புரிந்தது ராம்க்கு.
தொடரும்
Next episode will be published on 26th Sep. This series is updated weekly on Saturday mornings.