போய்டுமோன்னு பயத்துல செய்துட்டோம்....”
“உண்மையாவே நீங்க விளையாட்டை நூறு சதவிகிதம் விரும்பறீங்கன்னா என்ன பண்ணி இருப்பீங்க தெரியுமா.... நாம விளையாடாட்டாலும் பரவாயில்லை... நம்ம டீம் ஜெயிக்கணும்ன்னு யோசிச்சு தப்பு பண்ணி இருக்க மாட்டீங்க.... ஆனா உங்களுக்கு பொது நலத்தை விட சுயநலம் பெருசா போச்சு.... இது முதல் முறை அப்படிங்கறதால உங்களை மன்னிச்சு விடறோம்... அடுத்து இன்னும் ஒரு வாட்டி நீங்கன்னு இல்லை... யார் தப்பு பண்ணினாலும் அடுத்து எந்த மேட்ச்லையும் விளையாட முடியாதபடி பண்ணிடுவேன் .... ஒழுங்கா விளையாடுங்க.... அப்பறம் நீங்க பண்ணின தப்புக்கு தண்டனை ரெண்டு பேரும் அடுத்த மேட்ச் விளையாட மாட்டீங்க...”
“மன்னிச்சுடுங்க சார்... மைத்தி, துளசி நீங்களும் எங்களை மன்னிச்சுடுங்க.... தனிப்பட்ட முறைல நீங்க விளையாடறது எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கும்... பயத்துலதான் இதை பண்ணிட்டோம்... இனி இப்படி ஒரு தவறு நடக்காது... ரஞ்சன் சார் மறுபடி போன் பண்ணினா என்ன பண்ண சார்...”
“அவரைப்பத்தி கவலைப்படாதீங்க... பெரிய இடத்துல சொல்லி அவரை தூக்கியாச்சு... இனி அவர் தொல்லை உங்களுக்கு இருக்காது... இந்த விஷயம்ன்னு இல்லை... எதுனாலும் நீங்க என்கிட்டே வந்து சொல்லுங்க... உங்களுக்கு உதவ தயாரா இருக்கேன்... நீங்களே பயந்துட்டு தவறான முடிவு எடுக்காதீங்க.... மைத்ரேயி, துளசி ரெண்டு பேருக்கும் இப்போ சந்தோஷமா... துளசி என்ன நடந்தாலும் உன்னோட பொறுமையை கைவிடாத... நம்ம மனநிலையை அடுத்தவங்க ஆள எப்பவுமே விடக்கூடாது.... நமக்கு நாமதான் எஜமானன்... அடுத்த மேட்ச்ல உன்கிட்ட இருந்து குறைந்த பட்சம் அரை சதம் எதிர்பார்க்கிறேன்....”, கோச் சொல்ல கண்டிப்பாக எடுப்பதாக துளசி உறுதியளிக்க அவர்களுக்கு மேலும் பல அறிவுரைகளை கோச் கூற ஆரம்பித்தார்....
அடுத்தடுத்த போட்டிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்ல தமிழக அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது..... போட்டி சென்னையில்... மோதப்போவது அதே டெல்லி அணியுடன்....
தொடரும்
Next episode will be published on 30th Sep. This series is updated weekly on Wednesday mornings.