பௌவ் கணவனும் அவளை இன்னும் தன் அருகில் இழுத்து கையை அவள் இடுப்பை சுற்றி போட்டுக் கொண்டு, எதையுமே டைம் எடுத்து நிதானமா சொல்ல மாட்டியா டி?
ஏன் அத்தான் நான் என்ன செஞ்சேன் என்று அப்பாவியாக உதடை பிதுக்கி கண்களை சிமிட்டி கேட்டாள் பௌவ்.
பார் பார்.... எப்படி படுத்துறா பாரு. இருக்கட்டும் டி எல்லாத்துக்கும் வட்டியும் முதலுமாக இருக்கு உனக்கு கை சரி ஆகட்டும் டி. என்றது ஈஷ்வரின் மனது. அவன் தன்னை கட்டு படுத்தியபடி, பாவம் சுகிப் எப்படி முழிக்றான் பாரு.
நல்லா முழிக்கட்டும் அத்தான் அவன், 3 வருஷம் அவ இவனுக்கா காத்து இருந்தாள். அவங்க பக்கம்லாம் பெண்களுக்கு 12 -15 வயசுலயே கல்யாணம் செய்துடுவாங்க. இவ அப்பா இவள காலேஜ் சேர்தது அவ அவர் சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்கனும்ன்ற கண்டிஷனை இவள் அக்செப்ட் செய்ததால் தான். ஆனா மேடம் நம்ப ஊர்ல தங்கி படிச்சிட்டு இருக்கப்பவே அந்த பக்கிய லவ் பன்னிடாள். அவனோ 4 5 பெண்களோட அவ சொந்த ஊருக்கே டூர் போய் இவள ரொம்பவே காயப் படுத்திடான்.
சரி இப்ப திருந்திடுவான்னு பார்த்தா அவ முன்னாடியே வந்து என்னை ஏன் வேண்டாம்னு சொன்ன...? உன்னை நான் என் முன்னாடி நிக்க வைக்கிறேன் பார்னு சவால் விடுறான்.
இவ நை நைனு படுத்திடாள் ஈஷூப்பா... நான் இவங்க மேரேஜ் ப்றாப்ளம் சால்வ் செய்துட்டு நம்ப மேட்டரை ஓப்பன் செய்யலானு பார்தா என் தேன் சிட்டு ஒடச்சிட்டாள். என்று கணிஷ்காவை கொஞ்சினாள்.
அப்போது தான் இருவருக்கும் ஒன்று நினைவு வந்தது. இருவரும் ஒரே நேரத்தில் குட்டிமா உனக்கு எப்படி டா தெரிஞ்சது அத்தைக்கு கல்யாணம் ஆனது? என்றனர் மனைவியும் கணவனும்.
களுக்க்கி சிரித்த கணி அத்தை மாமா உங்க வீட்டுக்கு நிரைய கெஸ்ட் வரப்போறாங்க என்றாள் கணி சம்மந்தமே இல்லாமல்.
ஏன்டா செல்லம் என்று இருவரும் அதே மாதிரி சேர்ந்து கேட்க.... திரும்பவும் சிரித்தவள் இப்படி சேம் டைம்மில் சேம் வர்ட் யூஸ் பன்னா கெஸ்ட் வர்வாங்களாம். அப்போ என்று யோசித்தவள் பெரிய ஆறாட்சியை தன் கையில் செய்துவிட்டு 4,5,6,.... கெஸ்ட் அத்தை என்று பதில் கண்டுபிடித்த குஷியோடு குதித்தாள். பின் அம்மா செயின் மாதிரி நீயும் போட்டு இருக்கியே அத்தை என்றது குழந்தை ( ஐயோ... இது கூட தெரியலயே உங்களுக்கு என்ற டோனில்)
மிர்துவின் தோலில் கை போட்டுக் கொண்டு கணியின் மழளையை ரசித்தவன் தனக்கும்