அப்படி என்றால் நான் மட்டும் பொய் சொல்லவதாக நீ ஏன் நினைக்கிறாய் என்றாள் குயிலி.
பணம்... பணம் தான் காரணம்.... என் பணத்திற்காகத்தான் நீ பொய் சொல்லி இருக்கிறாய்.
ராகவ் ப்ளீஸ் உன் பணத்தின் மீது எனக்கு எந்த நாட்டமும் இல்லை. நான் இப்பொழுது உன்னிடம் ஒரு உதவி கேட்டு தான் வந்திருக்கிறேன். என்னுடைய பழைய காலத்தில் நானும் நீயும் சேர்ந்து விளையாடிய தருணங்கள் எல்லாம் என் நினைவிற்கு வந்துவிட்டது.. நீ.... ராகவ் நீயும் யோசித்துப்பார். உனக்கும் ஏதாவது தெரியலாம் என்று அவன் கையை பிடிக்க முயற்சி செய்ய அவனோ அங்கேயே நில் குயிலி... என் அருகே வராதே... இனி என்னை பார்க்க முயற்சி செய்யாதே... உன்னை பார்க்கும்போது எனக்கு பிடிக்கவில்லை. உன்னிடம் பேசவும் பிடிக்கவில்லை. தயவு செஞ்சு என் வாழ்க்கையில் இனி வராதே... என் வழியில் குறுக்கிடாதே. அப்படி மீறி நீ என்னை பார்க்க வந்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. தயவுசெய்து இங்கிருந்து முதலில் வெளியே செல் என்று கோபமாகக் கத்த என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து வெளியேறினாள் குயில்.
குயிலி வேதனையுடன் கலக்கத்துடன் வெளியே செல்வதை பார்த்த ராமு விற்கு கவலையாக இருந்தது. தன் முன்னாலேயே கவலையோடு செல்லும் அந்த பெண்ணிற்கு எந்த உதவியும் தன்னால் செய்ய இயலவில்லையே என்று வருத்தத்தோடு கிச்சனுக்குள் சென்று விட்டார்.
ஆனால் ராகவ்வின் முகத்தில் எந்த ஒரு வருத்தமும் எந்த ஒரு கவலையோ தெரியவில்லை. கோபத்தில் இருந்த அவன் தனது அறைக்கு சென்று நேராக சென்று விட்டான்.
அறைக்குள் இருந்தே அம்மா அந்த புகைப்படங்கள் எல்லாவற்றையும் இனி என் கண்ணில் படாதவாறு எங்கேயாவது போட்டுவிட சொல்லுங்கள். அல்லது எரித்துவிட சொல்லுங்கள் என்று கத்த புஷ்பா அவனது அறைக்குள் சென்றார்.
என்னப்பா இது.. கொஞ்சம் பொறுமையா இரு. ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்திற்காக குயிலி உன்னிடம் மாற்றி சொல்லி இருக்கலாம் அல்லவா. மீண்டும் ஒருமுறை விசாரித்து பாரப்போம் என்று குயிலிக்கு ஆதரவாக பேசினாள் புஷ்பா.
அம்மா தயவுசெய்து இனி நீங்கள் குயிலி பற்றி பேசாதீர்கள்... என்னுடைய ஒரே கனவு லட்சியம் எல்லாம் என்னுடைய பிசினஸ் பற்றியது மட்டுமே... நான் இன்னும் பத்து நாளில் இந்த புதிய ப்ராஜெக்ட் கான ஆசைன்மெண்ட்ஸ் எல்லாவற்றையும் முடித்து நான் என் கம்பெனியை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதனால் இந்த 10 நாட்களும் நான் என் அறையில் இருந்தே என் வேலைகளை கவனித்துக் கொள்ள போகிறேன் என்றான். அவனது வார்த்தைகள் புஷ்பாவிற்கு சந்தோஷத்தை கொடுத்தது.
சரிப்பா நீ உன் விருப்பப் படியே செய். எது வேண்டும் என்றாலும் என்னை கேள். உனக்காக