அம்மா இருக்கிறேன். நானும் இனி உன்னை கவனித்துக் கொள்கிறேன் என்று ஆதரவாக அவன் தலையை வருடிக் கொடுத்து விட்டு அவள் அங்கிருந்து வெளியேறினாள் .
காலையில் தன் மீது அத்தனை அன்பை புரிந்தவன் சாயங்காலத்தில் இப்படி நடந்து கொள்கிறானே என்று நினைக்கையில் அவளுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
இனி என்ன செய்வது. நான் நம்பி இருந்த ஒரே நம்பிக்கை அவன் தான். எனக்கு நிச்சயம் உதவி செய்வான் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது அவனே என்னை வெறுக்கிறான். இனி நான் என்ன செய்வேன் என்று யோசித்தவள் இனி தனக்கு உதவி செய்ய ஆசிர்வாதம் தாத்தாவால் மட்டுமே முடியும். நிச்சயம் அவருக்கு என்னை பற்றி ஏதாவது தெரிந்திருக்கும். நான் அவரைப் போய் சந்திக்க வேண்டும் என்று நினைத்தவள் அங்கிருந்து நேராக தெரசா இல்லத்திற்கு சென்றாள்.
அவளைப் பார்த்ததுமே புன்னகையுடன் வரவேற்ற ஆசிர்வாதம் தாத்தா என்னம்மா உன்னுடைய பழைய காலம் உனக்கு நினைவு வந்துவிட்டதா ... அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்காகத்தான் வந்து இருக்கிறாயா என்று கேட்டார்.
அதைக் கேட்டதும் இது எப்படி உங்களுக்கு தெரியும் என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டாள் குயிலி.
உன் முகத்தில் தெரியும் இத்தனை குழப்பங்களே எனக்கு இதை வெளிக்காட்டுகிறது. ஒருநாள் நீ பழைய காரியங்களை கேட்டு என்னிடம் வருவாய். அப்பொழுது இதை உன்னிடம் கொடுக்க சொல்லி உன்னை வளர்த்த உன் தாத்தா தந்தார் என்று சொல்லி தன் அறைக்கு சென்று எதையோ எடுத்து வந்தார்.
அவள் ஆர்வமாக பார்க்க அந்த பையில் இருந்த எடுத்து ஒரு பேப்பரையும் பழைய செய்தித்தாள் ஒன்றையும் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்ட குயிலி... தாத்தா நீங்கதான் எனக்கு உதவி செய்ய வேண்டும். தயவு செய்து நீங்களாவது என்னுடன் வந்து தங்கி விடுங்கள். நான் வளர்ந்த பழைய கிராமத்திற்கு சென்றாக வேண்டும் . நீங்கள் என்னுடன் வர முடியுமா என்று கேட்டாள்.
உன் கவலையை விடு குயிலி... நீ உன் பழைய காலங்களை தேடிச் செல்லும்போது உனக்கு துணையாக நான் வர வேண்டும் என்று உன் தாத்தா எனக்கு முன்னரே கட்டளையிட்டு விட்டார். அதனால் நான் இன்று இங்கு பேசி விடுமுறை வாங்கிக்கொண்டு நான் நிச்சயம் உன்னுடன் வருகிறேன். உனக்கு எல்லா விதத்திலும் துணையாக இருப்பேன் என்று வாக்கு கொடுத்தார் .
அவரது வார்த்தைகள் நம்பிக்கையையும் ஒரு தைரியத்தையும் கொடுத்தது. அங்கிருந்து