வெளியே வந்ததும் அவரை வெளியே தள்ளி கேட்டை சாத்தினான்.
நடந்தது எல்லாம் ஒரு நொடியில் நடந்து முடிந்துவிட புஷ்பாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
வாட்ச்மேனிடம் இனி அவரை உள்ளே விடாதே என்று எச்சரித்து விட்டு வேகமாக தன் அறைக்கு சென்று விட்டான்.
இனி என்ன செய்வது என்று தெரியாமல் ராமு கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்.
நிலைமை என்னவென்று புரிவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாக பிரதாபனை அழைத்து நிலமையை சொன்னாள் புஷ்பா.
ராமு நமக்கு மிகவும் தேவை இந்த நேரத்தில் அவனை வீட்டை விட்டு அனுப்புவது மிகப்பெரிய தவறு. அவனை வைத்து தான் நான் நிறைய காரியங்களை சாதிக்க வேண்டும். அதனால் உடனே அவனை கண்டுபிடிக்க நம் ஆட்களை அனுப்பு என்றான் பிரதாபன்.
அடுத்த நொடியே புஷ்பாவிடம் இருந்து கட்டளை பிறக்க வீட்டில் வேலை செய்பவர்கள் ராமுவை தேடி வெளியே வந்தனர்.
ஆனால் அங்கு ராமு எங்குமே இல்லை. அந்த மெயின் ரோட்டில் அங்குமிங்கும் ஓடினார்கள். ராமுவை காணாததால் மீண்டுமாக திரும்பி வந்து ராமு எங்கேயும் இல்லை என்ற தகவல் தெரிவித்தனர்.
அவரை வெளியே தள்ளி 5 நிமிடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் அவர் எங்கு போயிருப்பார். எப்படி காணாமல் போனார்... என்ன தான் நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் புஷ்பா அப்படியே அமர்ந்து விட்டாள்.
ராகவ்வின் கோபத்தினால் ராமு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டார். வெளியே சென்றவர் என்ன ஆனார்???... அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திகைக்கும் குயிலிக்கு அந்த பேப்பர் ஓவியம் கை கொடுக்குமா?... பார்ப்போம்.
தொடரும்