Page 7 of 7
ஓய்வெடுங்கள் எனக்கு சிறு வேலை இருக்கிறது என்று அவள் கையில் கொஞ்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே சென்றாள்.
திரும்பி வரும் பொழுது அவளது கையில் ஒரு பையும் அவளது தலையில் இரண்டு கட்டு விறகும் இருந்தது.
அதை பார்த்ததும் பதறி போன ஆசிர்வாதம் உனக்கு என்ன ஆச்சும்மா... இது என்னவென்று கேட்க தாத்தா கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எல்லாம் உங்களுக்கு புரியும் என்று சொன்னவள் தாத்தாவையும் அழைத்துக் கொண்டு குகைக்குள் சென்றவள் தன் திட்டத்தை கூற ஆரம்பித்தாள்.
தொடரும்