சரி... அவளைக் கண்டு பிடித்ததும் அவளுக்கே தெரியாமல் அவளை பாலோ செய்யுங்கள். நேரம் வரும்போது பிடித்துக் கொள்ளலாம்.
சரி அண்ணா.. நீங்கள் எப்பொழுது மும்பை வருகிறீர்கள்.
நான் இரண்டு நாளில் கிளம்புவேன். நான் வரும்போது ராகவ்வையும் கூட்டிக் கொண்டு தான் வருவேன். இனி அவனை தனியாக விட வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது.
சரி அண்ணா... அவனுக்கு ஒரு அறையை ஏற்பாடு செய்கிறேன்.
வேண்டாம்... அவன் மகா புத்திசாலி... உன் வீட்டில் இருந்தால் அவனுக்கு ஏதாவது சந்தேகம் வந்துவிடக்கூடாது. நமது கெஸ்ட் ஹவுசில் அவனைத் தங்க வைத்துவிட்டு அவ்வப்போது நாமும் சென்று பார்த்துக்கொள்ளலாம். அதனால் நம் ஆட்களை வைத்து கண்காணிக்க சொல். வேலை செய்வதற்கு நம் ஆட்களை ஏற்பாடு செய். எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும்...
சரி அண்ணா எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன்.
சரி சத்யா... ரொம்ப ஜாக்கிரதையாக செயல்படு இப்பொழுது வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டு ராகவ்வை காண அவன் அறைக்கு சென்றான் பிரதாபன்.
ராகவ் என்றவாறே கதவை தட்ட அது தானாகவே திறந்துகொண்டது.
வாங்க அப்பா... பிசினஸ் எல்லாம் அரேன்ஜ் செய்து ஸ்டாப்புக்கு கொடுத்து விட்டேன். இனி இரண்டு மாதம் வரை அவர்கள் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். நாம் அவ்வப்போது மேற்பார்வை செய்தால் மட்டும் போதும். இந்த முறை நாம் ரிலாக்ஸா நம்முடைய பயணத்தை தொடங்கலாம் அப்பா. எப்போது கிளம்ப வேண்டும் என்றான் ராகவ்.
இன்னும் இரண்டு நாளில் செல்ல வேண்டும். நீ ஆயத்தமாய் இரு என்றவர் சற்று தயக்கத்துடன் ராகவ்.... என்றார்
என்கிட்ட கேட்க உங்களுக்கு என்ன தயக்கம் அப்பா... எதையோ கேட்க நினைத்து கேட்காமல் இருப்பதற்கு காரணம் ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன விஷயம் கேட்க நினைக்கிறீர்கள்.
சற்றுநேரம் யோசித்தவர் குயிலி பற்றி தான் என்றார்.
அவளைப் பற்றி பேச என்ன இருக்கிறது அப்பா...
இருக்கிறது... ஒருவேளை அவள் உன்னை அதிகமாக காதலித்து இருக்கலாம். அதனால் தான் பொய் சொல்லி உன்னை நெருங்கி இருக்கலாம். அதனால் ஒருமுறை நீ யோசித்துப்பார். குயிலிடம் பேசி பார். உனக்கு இன்னும் தெளிவான முடிவு கிடைக்கலாம் அல்லவா ...
எனக்கு பொய் சொல்கிறவர்களை பார்த்தாலே பிடிக்கவில்லை.. பிடித்தவர்களிடம் பொய்