எடுத்துக்கொண்டாயா என்றார் பிரதாபன்..
எஸ்... எஸ்.. போகலாம் என்றவன் ஒன் மினிட் என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றான்.
குயிலி... நான் திரும்பி வந்ததும் நிச்சயம் உன்னை பார்க்க வருவேன். ஏனோ உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கிறது. அன்றைக்கு உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும் தான். ஆனால்..... என்று ஏதோ சொல்ல வந்தவன் அனைத்தையும் தனக்குள் புதைத்துக் கொண்டு மிஸ் யூ குள்ள வாத்து... லவ் யூ மை டியர் என்று வாய் விட்டு சொல்லி விட்டு பிரதாபன் உடன் கப்பல் ஏறுவதற்காக சென்றான்.
அவன் கூறிய வார்த்தைகள் பெண்ணவளுக்கும் கேட்டு விட்டது போல... அவளது முகத்தில் ஒரு வித அமைதி பரவ முழுவதும் மயங்கினாள்.
அவளருகில் இருந்தவனோ அந்த பைலில் இருந்த தகவல்களை யாருக்கோ அனுப்பி கொண்டு இருந்தான்.
திரும்பி வந்து உன்னை சந்திப்பேன் என்ற எண்ணத்தோடு கடந்து செல்லும் ராகவ் திரும்ப வருவானா?.. தன்னுடைய கடந்த காலத்தை அறிந்து கொள்வானா?... குயிலி யின் நிலை என்னவாகும்?... ஆசிர்வாதம் தாத்தா என்ன ஆனார்?... பிரதாபனின் திட்டம் வெற்றி பெறுமா?.... பார்க்கலாம்.
தொடரும்