தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்
மனதை மயக்கும் அந்தி மாலை நேரம்...
அண்ணா... அது ஆபத்தான இடமாக தெரிகிறதே.. நிச்சயம் நீங்கள் சென்றுதான் ஆக வேண்டுமா... மீண்டும் ஒரு முறை அந்த டாக்டரிடம் பேசி பார்க்கலாமே என்றான் சத்யா.
சத்யா... இது என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கிறது. நாம் ஏற்கனவே ராகவை அந்த டாக்டரிடம் கூட்டிட்டு போய் விட்டோம். கடந்த முறை அவனை கூட்டிட்டு போன போது சொன்னது உனக்கு நினைவில்லையா...
நினைவிருக்கிறது அண்ணா. ஆனால் உங்கள் உயிரை பணயம் வைத்து அங்கு செல்வதை விட அவன் உயிரை பணயம் வைத்து மீண்டும் ஒரு முறை முயற்சிக்கலாம் அல்லவா...
முட்டாள்.... முட்டாள்.... முட்டாள் தனமாக பேசாதே. தங்க வாத்து போடுகிற முட்டையோட வயிற்றை வெட்டி மூட்டையை எடுக்க முயற்சி செய்வதுபோல் இருக்கிறது, நீ பேசுகிறது.... அவன் சின்ன பையனாக இருக்கும்போதே அமெரிக்கா கூட்டிட்டு போயி டாக்டர்கிட்ட அவன் மனதில் இருக்கிற அந்த ரகசியங்களை எடுக்க முடியுமான்னு கேட்டேன். அதாவது அவன் மூளையில் இருக்கிற அனைத்து விஷயங்களையும் எடுத்து தர சொல்லி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். உடனே அதற்குரிய சிகிச்சை கொடுத்து அவனை மயக்கநிலைக்கு கொண்டுபோய் அவன் மூளையில் பதிவாகியிருப்பதை எடுக்க முயற்சி செய்தபோது உடல்நிலை மோசமாக ஆரம்பித்து விட்டது. அதனால் டாக்டர் அந்த சிகிச்சையை நிறுத்தி விட்டார். தொடர்ந்து இந்த முயற்சி செய்தால் அவன் மூளையில் இருப்பது முழுவதும் அழிந்துவிடும். அதனால் ஒரு இருபது வயதுக்கு அப்புறம் முயற்சி செய்வோம். அதுவரை மாதத்திற்கு இரண்டு முறை இந்த மாத்திரையை கொடுங்க. டீ காபி என்று எதிலாவது மிக்ஸ் செய்து கொடுங்கள். அப்பொழுது தான் சந்தேகம் வராது என்று சொன்னார். அதனால் தான் மாத்திரையை அப்படி கொடுத்து வந்தேன்.
அவர் சொன்ன மாதிரி 20 வயதுக்கு அப்புறம் மறுபடியும் அவனை கூட்டிட்டு போனேன். அவன் மனதில் இருந்த எல்லாவற்றையும் படிக்க ஆரம்பித்தோம். எதிர்காலத்திற்கு என்று அவன் போட்டு வைத்த பிளான், குயிலி மீது அவன் வைத்திருந்த பாசம், பிஸினஸை விரிவாக்க அவன் போட்டு வைத்திருந்த திட்டங்கள், சின்ன வயதில் நாம் அவன்கிட்ட நடந்துகொண்ட விதம் என எல்லாமே அவன் மூளையில் பதிவாகி இருந்தது. ஆனால் சிறுவயதில் அவனுக்கு நடந்த எதுவும் அவனது மூளையில் இல்லை. அவர்கள் அவன் மூளையில் பதிவு செய்து வைத்திருந்த எந்த பார்முலாவும் அதில் இல்லை எல்லாமே அழிந்து போயிருந்தது.
ராணுவங்களில் எதிரிகளை அழிக்க மனிதர்களுக்கு பதிலாக மெஷின்களை அல்லது