இதுவரை அவளை சந்திக்க யாரும் வந்ததுமில்லை. அவள் இந்த சந்தியாவை தவிர யாரிடமும் பேச நான் பார்க்கவில்லை. அதனால் ஜனனி யாரையும் காதலித்து இருக்க வாய்ப்பில்லை.
வாய்ப்பில்லை என்று நீங்களே முடிவு செய்து விட்டால் எப்படி. ஜன்னி அவளுடைய காதலனின் போட்டோவை என்னிடம் தந்துவிட்டாள். ஏனென்றால் இனி அவளால் அதை தன்னிடம் வைத்துக் கொள்ள முடியாது அல்லவா...அதனால்தான் என்னிடம் தந்து விட்டாள் என்று கூறிக் கொண்டே அவள் அருகே வந்த சந்தியாவை பார்த்து முறைத்தாள் ஸ்வீனா...
என்ன செய்ற, யாராவது பார்த்து விடப் போறாங்க... இல்லாத விஷயத்தைச் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தாதே என்றவாறே சுற்றி பார்க்க, யார் அந்த காதலன் என்று நான் பார்த்து சொல்கிறேன் என்றபடியே அங்கு வந்த ஸ்வப்னா சந்தியாவின் கையில் இருந்த பேப்பரை பிடிங்கினாள்.
பேப்பரை விரித்தது ஸ்வப்னாவாக இருந்தாலும் அந்த படத்தை முதலில் பார்த்தது அஸ்விட் தான்.
அஸ்வித் யோசனையுடன் சந்தியாவை பார்க்க ஹாய் ப்ரோ... நான் சந்தியா.
தெரியும் .. ஹவ் ஆர் யூ என்று பேருக்கு கேட்டு வைத்தான். அவன் மனமோ இவள் ஏன் இந்த நேரத்தில்இங்கே வந்தாள் என்று அவளை வசை பாடிக் கொண்டிருந்தது.
இவள் என்ன செய்ய நினைக்கிறாள். என் ஜனா போட்டோவை கொண்டு வந்து ஜனனியின் காதலன் என்கிறாள். இவளுக்கு பைத்தியமா என்று முனுமுனுக்க நான் பைத்தியம் இல்லை தெளிவாக தான் இருக்கிறேன் என்றாள் சந்தியா.
அப்படி என்றால் இந்த போட்டோ அதாவது பென்சில் ஸ்கெட்ச் உன்னிடம் எப்படி...
இது ஜனனியோடது...என் முறைப்பையன் சசிதரன் தான் அவளுக்காக இதை வரைந்து கொடுத்தான் என்று சொல்ல அனைவரும் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தனர்.
சந்தியா ஜனனியின் கற்பனை காதலன் கனவைப் பற்றி சொல்ல உண்மையாகவே ஆச்சரியமா இருக்கு. அதனால்தான் நீ அன்றைக்கு அண்ணாவைப் பார்த்து அப்படி சிரித்து வைத்தாயா... நான் கூட தவறாக எண்ணி விட்டேன்... மன்னித்து விடு என்று சொல்ல சந்தியாவும் என்னை மன்னித்து விடு நானும் உங்களை பார்க்கும் முன் தவறாக எண்ணி விட்டேன் என்று சொல்ல அங்கே ஒரு புதிய நட்பு உதயமானது.
ஆனால் அஸ்விட் மட்டும் தனியாக நின்றான்.
என்னாச்சு அஸ்... தனியாக நிற்கிறீர்கள்.
நீ எப்பவும் என் கூடவே இருக்கிறாய். இரவு மட்டும் தான் வீட்டுக்கு செல்கிறோம். அப்படி இருக்கும்போது எனக்கு தெரியாமல் இந்த கல்யாணத்தையே திட்டமிட்டிருக்கிறாய். இந்த