தர்ஷினி பக்கம் திரும்பியவன் தர்ஷினி எனக்கு ஒரு உதவி பண்ணுங்க. என்னோட போட்டோ உங்ககிட்ட காட்டணும்னு சொல்லி அத்தை வாங்குனாங்க. அது அவுங்க ரூம்ல இருக்கானு மட்டும் பார்த்து சொல்லுங்க ப்ளீஸ்...
சரி இருங்க வரேன் என்று அபிராமி அறைக்கு சென்றவள். சில நிமிடம் கழித்து ஒரு டைரியுடன் வந்தாள்.
அத்தை உள்ள எல்லா இடத்திலேயும் பாத்துட்ட இல்ல.
ஐவருக்கும் இப்போதுதான் மூச்சு வந்தது.
ஆனா இந்த டைரி மட்டும் தான் மிச்சம் இருங்க பார்த்து சொல்றேன் என்று அவர்கள் முன்பே டைரியில் தேடுவது போல் அவள் டைரியை புரட்ட அதிலிருந்து ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் விழுந்தது.
அதை எடுத்துப் பார்த்தவள். அவன் முகத்தையும் இந்த புகைப்படத்தையும் மாறி மாறிப் பார்த்தாள். ஆமா அத்த இது இவுங்களோட ஃபோட்டோ தான்.
அந்த ஐவரில் சின்னத்தை தனலட்சுமி அக்கா இதெல்லாம் சரிவராது இரு என்ன அத்தானுக்கு கூப்பிடுறேன் அவங்க வந்து பேசட்டும்.
கொஞ்சம் இரு தனம். சரி தம்பி பார்த்த மாப்பிள்ளையாவே இருந்தாலும் அக்கா செத்ததுக்கு கூட வந்து பார்க்காத மனுஷால நம்பி எங்க பொண்ணு எப்படி அனுப்புறது.
என்னம்மா நீங்க நான் தான் இவ்வளவு எடுத்து சொல்றேன்ல. அவங்களுக்கு விஷயம் எதுவும் தெரியாது மா நான் நான் பிரியதர்ஷினிய கூட்டிகிட்டு போய் எல்லாம் புரிய வைக்கணும். எங்க அத்தை என் மேல ரொம்ப பாசம் வச்சிருந்தாங்க அவங்களோட கடைசி ஆசை இதுதான். நான் பிரியதர்ஷினி கூட்டிட்டு போக தான் வந்தேன்.
நீ கூட்டிகிட்டு போயிடுவியா எடுடி தனம் அந்த அருவாள சீவிடுவோம் சீவி, சின்னப் பையனா இருக்கியேனு பொறுமையா போனா ரொம்பத்தான் பேசுறியே... பிரியா நீ முதல்ல உள்ள போ...
இல்லை இல்லை எல்லாருமே வெளியே போங்க ....
அனைவரும் அதிர்ச்சியாக அவனை பார்த்தனர். யார் வீட்ல வந்து யாரை வெளியே போக சொல்ற... என்று கன்னியம்மாள் பாய்ந்துவந்து அவன் சட்டையை பிடிக்க...
இது என்னோட வீடு என்று அவன் கூலாக கூறினான்.
இது உன் வீடா....
ஆமா பிரியதர்ஷினிய எனக்கு கட்டி வைக்க எப்ப முடிவு பண்ணாங்களோஅப்பவே வக்கீல கூட்டி வந்து எல்லா சொத்தையும் என் பேர்ல எழுதி வைத்து வச்சிட்டாங்க...