அவள் வாய் அப்படி கூறினாலும் அவள் கை அவன் தலை முடியை கோதி விட்டுக் கொண்டிருந்தது. அதில் அவனும் உறங்கிட....அவன் தூங்கும் அழகை சிறிது நேரம் ரசித்தவள்.அவன் தலையை சோபாவில் வைத்து விட்டு தன் அறைக்குச் சென்றவள் தலையணையையும் போர்வையையும் எடுத்துவந்து அவனுக்கு போர்த்திவிட்டு சென்று விட்டாள்.
கதவை நன்றாக மூடியவள். தன் அறைக்கு சென்று படுத்தாள். தூக்கம் நன்றாக கண்களை சுழற்ற...... அப்படியே உறங்கிப் போனாள்.
இருவரும் நன்றாக உறங்கி விட்டனர். மாலை 5 மணி கதிருக்கு அப்பொழுதுதான் விழிப்பு வந்தது. விழித்தவன் சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் முழிக்க.....பின்பு தான் இருக்கும் இடத்தை உணர்ந்து தர்ஷினியை தேடினான்.
அவள் தன் அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்று அவன் அவள் தலை முடியை காதோரம் ஒதுக்கிவிட்டு அவளையே ரசித்தான்.
எப்படி இருக்க வேண்டியவங்க....நான் இவுங்களுக்கு கரெக்டான ஜோடி தானா.... என்ன ஆனாலும் பரவால்ல..... இவங்களுக்கு என்னால முடிஞ்ச ஒரு பெஸ்ட் வாழ்க்கைய தான் கொடுப்பேன். இப்படி ஒரு வீட்ல இருந்துட்டு எப்படி எங்க வீட்ல இருந்தாங்க...சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாம, கிரேட் தான். என்று அவன் மனைவியை மனதில் பாராட்டியவன். மணியைப் பார்த்தான். அவனுக்கு பசி நன்றாகவே எடுத்தது.
நேராக சமையலறைக்கு சென்றவன். தர்ஷினி போட்ட பிளாக் காபி மிச்சமிருந்தது. அதனை சூடு பண்ணி குடித்து தற்போதைக்கு பசிக்கு அணை போட்டான். டீ யை பருகிக்கொண்டே தன்னுடைய கைபேசியை எடுத்து சிறிது நேரம் நோண்டிவிட்டு, சமையலறை சென்று சமைக்கத் தொடங்கினான்.
ஆறு மணி அளவில் தர்ஷினி -கும் விழிப்பு வர..... தூக்கத்தில் இருந்து எழுந்தவள். சமையலறையிலிருந்து நன்றாக வாசனை வரவும் தூக்கக்கலக்கத்தில் சமையலறை சென்று,
மம்மி...... என்று அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.
குழம்பை ஓரளவு முடித்தவன் சுவை பார்ப்பதற்காக ..... கரண்டியை எடுக்க...
இவள் கொடுத்த அதிர்ச்சியில் கரண்டியை நங்.... என்று கீழே போட்டான்.
அந்த ஒலியில் தர்ஷினிக்கும் தூக்கம் கலைய.....அப்பொழுதுதான் நன்றாக முழித்து பார்த்தாள்.
தான் பிடித்திருப்பது தன் அன்னையல்ல என்பதை அப்போதுதான் உணர்ந்தாள். இருந்தும் அவள் விலகாமல் அப்படியே நின்றாள்.