தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 17 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
அவளது வகுப்பு மாணவனும், அவர்களின் துறையில் இரண்டாமாண்டு “ஏ “ பிரிவில் உள்ள மாணவன் ஒருவனும் சட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தனர். “பாய்ஸ்” படத்தின் சிடி இரு பிரிவில் உள்ளவர்களுக்கும் சேர்த்து ஒரு மாணவன் கொண்டு வந்திருக்க, அதைத் தரமாட்டேன் என்று அவர்கள் மறுக்க அதற்கொரு சிறுபிள்ளைத் தனமான வாக்குவாதம். அவளின் வகுப்பு மாணவனை ஏ பிரிவின் மாணவர்கள் பிடித்துத் தள்ளிவிட, நீங்களும் அதே ரிசார்ட்டில தானே தங்குறீங்க, உங்களை வச்சுக்குறேன் என்று கத்திக் கொண்டே வந்து பஸ்சில் ஏறினான்.
அவள் வகுப்பு மாணவிகளில் ஒருத்தி ஸ்வெட்டர் எடுத்து வர மறந்துவிட்டாள். அவளுக்கு வீசிங் வேறு வருமென்று சொல்லவும், ரம்யா தனது ஸ்வெட்டரை எடுத்து அவளைப் போட்டுக் கொள்ளுமாறு கொடுத்து விட்டாள். ரம்யாவிடம் தேவி கேட்டாள், நீ என்னடி பண்ணுவ, எனக்கு இன்னொரு ஸ்வெட்டர் இருக்குடி. அவர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட அறைகளில் சென்று பைகளை வைத்து விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். இரவு உணவு தயாராகி இருந்தது. முதலில் பெண்கள் சென்று சாப்பிட்டு வந்தனர். ஒன்பது மணிக்கு கேம்ப்பயர் ஏற்பாடு செய்திருந்தனர். பெண்கள் அனைவரும் லட்சுமி மேம் இருந்த அறையில் கூடியிருந்தனர்.
அவர்களுடன் வந்திருந்த மணி சார், மேமிடம் வந்து எதோ சொல்லிவிட்டு செல்ல, கேம்ப்பயர் கேன்சல் ஆய்டுச்சு என்று சொன்னார்கள். ஏன் மேம்? என்னாச்சு என்று? கேட்டவர்களுக்கு பசங்க சிலருக்கு உடம்பு சரியில்லையாம் ஹாஸ்பிட்டல் போக வேண்டியிருக்குன்னு சொன்னாங்க. தேவி டக்கென்று, அவனுங்க அப்பவே பீர் பாட்டில் கொண்டு வரும் போதே தெரியும், குடிச்சிட்டு வாந்தி எடுக்கத் தான் இவனுங்களுக்கு நேரம் சரியா இருக்கும்னு. ச்சே ச்சே அப்படிலாம் இல்லப்பா, சிடிக்கு சண்டை போட்டாங்க இல்லையா, ரெண்டு பேருக்கு சின்ன காயமாம், அதுக்குத் தான் ஹாஸ்பிட்டல் போணும்னு சொல்றாங்க. பசங்கன்னா அப்படித் தான். சரி உங்களுக்குத் தூக்கம் வருதா. இல்லை நாம எதாவது விளையாடலமா என்று மேம் கேட்கவும் ஒரே குரலில் விளையாடலாம் என்று சொல்ல, மேம் இரு அணிகளாகப் பிரித்து தான் நடுவராக இருந்து கொண்டார். பாட்டுக்குப் பாட்டு, சைகை விளையாட்டு, என அந்த அறைக்குள் என்ன விளையாட முடியுமோ அதில் நேரம் கழித்தார்கள். மணி இரவு பதினொன்று ஆகியது. குளிர் நன்கு அதிகமாயிற்று. எல்லாரும் அவரவர் அறைக்குச் சென்று தூங்கக் கிளம்பினார்கள்.
ரம்யா வேகமாக வந்து, தினேஷின் சட்டையை எடுத்து அணிந்து கொண்டாள். இதான் உன்னோட இன்னொரு ஸ்வெட்டர் அப்படியா ரம்யா? என்று கிண்டலாகக் கேட்ட தேவியிடம் ஆமா என்று கண்ணடித்தாள். நேரம் செல்ல செல்ல ரம்யா நன்கு நடுங்க ஆரம்பிக்க, தேவிக்கு சற்று பயமாகி விட்டது. “மேடம் பெரிய தாராளப் பிரபு, ஸ்வெட்டர் தனக்கில்லாம தானம் கொடுத்துட்டு நடுங்குறதைப் பாரு!என்று திட்டிவிட்டு, தான் தலைவலி, மூக்கடைப்புக்கு வைத்திருந்த